குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


தோழியின் சொல் வன்மை

பாடல் வரிகள்:- 009 - 012

நல் கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பி்றர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், . . . .[10]

உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்,
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின், . . . .[9 - 12]

பொருளுரை:

என் தோழியின் சிறப்பான அழகு கெடவும், அவளுடைய நறுமணமான தோள் மெலியவும், கை வளை வழுக்கி விழுவதை பிறர் அறியவும், தனிமையில் அவள் வருந்தவும், அவள் நெஞ்சின் உள் மறைந்திருக்கும் தாங்க முடியாத அரிய நோயை, என் சொல்லின் வன்மையால் அவளை நெருக்கி, கூறுமாறு நான் ஏவுவதால்,

குறிப்பு:

உய்யா அரும் படர் (11) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உயிர் கொண்டு பிழைத்தற்கரிய நோய், ஜெகந்நாதாசார்யார் உரை - பிரிவு ஆற்றாளாகிய தலைமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலாலாகிய நினைவு.

சொற்பொருள்:

நல் கவின் தொலையவும் - சிறப்பான அழகு கெடவும், நறும் தோள் நெகிழவும் - நறுமணமான தோள் மெலியவும், புள் - கை வளை, பிறர் அறியவும் - பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும் - தனிமையில் வருந்தவும், உள் கரந்து உறையும் - நெஞ்சின் உள் மறைந்திருக்கும், உய்யா அரும் படர் - தாங்க முடியாத அரிய நோய், செப்பல் வன்மையின் - சொல்லின் வன்மையால், செறித்தியான் கடவலின் - செறித்து யான் ஏவுவதால், நெருக்கி நான் ஏவுவதால் (செறித்தியான் - குற்றியலிகரம், செறித்து யான்)