சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும் பரதவர் தரும் விருந்தும்
பாடல் வரிகள்:- 146 - 163
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, . . . .[150]
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் . . . .[146 - 153]
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூல் முண்டகங் கதிர்மணி கலாஅலவு
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்
கானல் வெண்மணற் கடலுலாய் நிமிர்தரப் . . . .[150]
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி
பொருளுரை:
அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற மலர்களைத் தாழை பூக்கவும், வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும், முதிர்ந்த சூலையுடைய முள்ளிச் செடிகள் நீலமணியைப் போன்ற மலர்களைப் பூக்கவும், நெடிய தாளினையுடைய புன்னை மரங்கள் முத்துப் போன்ற அரும்புகொள்ளவும், கடற்கரையின் வெண்மணலில் கடல் நீர் படர்ந்து ஏற, புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழியில் நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த இடங்களையும் மதிலையும், மதிலைத் தன் பெயரில் கொண்ட, குளிர்ந்த நீரையுடைய குளங்களையும் உடைய, எயிற்பட்டினத்திற்குச் செல்வீர் ஆயின்,
சொற்பொருள்:
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும் - அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற மலர்களைத் தாழை பூக்கவும், தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் - வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும், கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் - முதிர்ந்த சூலையுடைய முள்ளி நீலமணியைப் போல பூக்கவும், நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும் - நெடிய தாளினையுடைய புன்னை மரங்கள் முத்துப் போல் அரும்புகொள்ளவும், கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர - கடற்கரையின் வெண்மணலில் கடல் படர்ந்து ஏற, பாடல் சான்ற நெய்தல் நெடுவழி - புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழி, மணிநீர் வைப்பு மதிலோடு - நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த ஊர்களையுடைய மதிலையுடைய, பெயரிய - மதிலைத் தன் பெயரில் கொண்ட (எயில் - மதில்), பனி நீர்ப் படுவின் பட்டினம் - குளிர்ந்த நீரையுடைய குளங்களையுடைய எயிற்பட்டினம், படரின் - செல்வீர் ஆயின்
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின், . . . .[155]
கரும் புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், . . . .[160]
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் . . . .[146 - 163]
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் . . . .[155]
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉ மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கினு ளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் . . . .[160]
றளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பொருளுரை:
உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல் மிகுந்த அலைகள் கொண்டு வந்து குவித்த நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்தி, பெரிய தோளினையும் நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையும் உடைய பரதவர் பெண் அரித்த பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்கக் கொடுப்பார்கள். மலர்க் கொத்துக்களையுடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன் நீங்கள் உலர்ந்த குழல் மீன் குழம்பைப் பெறுவீர்.
குறிப்பு:
அறல் (162) - தாள இறுதி. பாணி - தாளம்
சொற்பொருள்:
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன - உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல், வீங்கு திரை கொணர்ந்த - மிகுந்த அலைகள் கொணர்ந்த, விரை மர விறகின் கரும் புகைச் செந்தீ மாட்டி - நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்தி, பெருந்தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளைமகள் - பெரிய தோளினையும் நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையுடைய பரதவர் பெண் (ஏக்கறூஉம் - இன்னிசை அளபெடை), அரித்த பழம்படு பரதவர் மடுப்ப - அரித்த பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்க கொடுப்பார்கள், கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான் - மலர்க் கொத்துக்களை உடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி - அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, அறல் குழல் பாணி தூங்கியவரொடு - தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன், வறல் குழல் சூட்டின் பெறுகுவீர் - உலர்ந்த குழல் மீன் குழம்பைப் பெறுவீர்