சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும்

பாடல் வரிகள்:- 207 - 220

செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த,
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், . . . .[210]

ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
கருதியது முடித்தலும், காமுறப்படுதலும்,
ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த . . . .[215]

அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த
பன் மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி . . . .[207-220]

பொருளுரை:

பாணர்களே! கோட்டை வாயிலில் நுழைவதற்கு உங்களுக்குத் தடை இல்லை. எனவே உள்ளே சென்றால் நல்லியக்கோடனைக் காணலாம். விண்மீன்களுக்கு இடையே வெண்ணிலா விளங்குவது போல அவள் தன் சுற்றத்தாருக்கு இடையேயும், அவனிடம் பரிசில் பெற்று அவனை வாழ்த்தும் பரிசிலர்களிடையேயும் இருப்பதைக் காணலாம்.

அவன் எத்தகைய பண்புகளைப் பெற்றவன் தெரியுமா!, செய்ந்நன்றி மறவாதவன். சிற்றினத் தொடர்பு இல்லாதவன். இன்முகம் காட்டுபவன். இனியனாக நடந்து கொள்பவன். சிறப்புகள் குவிந்தாலும் செறிவோடு விளங்குபவன். அறிந்தவர்களின் போற்றுதல்களைப் பெற்றவன்.

அஞ்சியவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன். அவனிடம் சினம் இருக்கும். அதில் கொடுமை செய்யும் வெஞ்சினம் இருக்காது. அணி செய்து தன்னை அழகுபடுத்திக் கொள்வான். அழிக்க வரும் படையைத் தானே முன்னின்று தாங்குவான்.

வாளால் புகழ் பெற்ற வயவர்கள் இவனைப் பாராட்டிப் புகழ்வர். எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன். எல்லாரும் ஆசை கொள்ளும் பாங்கு உள்ளவன். நடுவு நிலைமையிலிருந்து பிறழாதவன். நிகழ்ந்ததை உணர்ந்து தீர்ப்பறம் கூறவல்லவன்.

பெண்கள் புகழும்போது இவன் ஒன்றும் அறியாதவனாக மாறிவிடுவான். பிறரிடம் தன் அறிவாற்றலைப் புலப்படுத்துவான். வரிசை அறிந்து கொடை வழங்குவான். இவ்வளவு தான் தரவேண்டும் என்று வரையறை செய்யாமல் வழங்குவான். அவன் அருகில் சென்று...............