சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


கடையெழு வள்ளல்களின் சிறப்பு - ஓரி

பாடல் வரிகள்:- 107 - 112

..................................நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த . . . .[110]
ஓரிக் குதிரை ஓரியும்............

பொருளுரை:

அடர்ந்த கிளைகளில் நறுமணமான மலர்கள் நெருங்கி இருந்த இளமை முதிர்ந்த சுரபுன்னை மரங்களையும் சிறிய மலைகளையும் உடைய நிலங்களைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவனும், காரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய காரி என்பவனோடு போரிட்டவனும், ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்,

குறிப்பு:

காரிக்கும் ஓரிக்கும் நடந்த போர் பற்றின குறிப்புகள், அகநானூறு 209, நற்றிணை 320, சிறுபாணாற்றுப்படை (110-111) ஆகிய பாடல்களில் உள்ளன. ஓரியைக் கொன்று, பின் ஓரியின் கொல்லி மலையைச் சேர மன்னனுக்குப் பரிசாகக் காரி கொடுத்தான் (அகநானூறு 209).

சொற்பொருள்:

நளி - அடர்ந்த, சினை - மரத்தின் கிளைகள், நறும் போது - நறுமணமான மலர்கள், கஞலிய - நெருங்கின, பொலிந்த, நாகு - இளமை, முதிர் - முதிர்ந்த, நாகத்து - சுரபுன்னை மரங்களுடைய, குறும் பொறை - சின்ன மலைகள், நல்நாடு - நல்ல நிலங்கள், கோடியர்க்கு - கூத்தாடுபவர்களுக்கு, ஈந்த - ஈன்ற, காரிக் குதிரை - காரி என்ற பெயரையுடைய குதிரை, காரியொடு - காரியுடன், மலைந்த - போரிட்ட, ஓரிக் குதிரை ஓரியும் - ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்

..................................என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் . . . .[107 - 112]

பொருளுரை:

என அந்த ஏழு பேர், எழுந்த போர்களில் வெற்றி அடைந்தவர்கள், கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்.

சொற்பொருள்:

என ஆங்கு எழு சமம் கடந்த - என அங்கு ஏழு பேர் எழுந்த போர்களில் வெற்றி பெற்றோர், எழு உறழ் திணி தோள் - கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள் (உறழ் - உவம உருபு)