சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

இளைப்பாறும் பாணன்
பாடல் வரிகள்:- 007 - 012
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழி நாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப, . . . .[10]
பாலை நின்ற பாலை நெடு வழி,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ,
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் . . . .[10]
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
பொருளுரை:
இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற சூட்டையுடைய பரல் கற்கள் தங்கள் கால்களைக் கிழித்ததால், மெல்ல நடந்து சென்று, முதுவேனில் காலத்தின் வெப்பமான காலை நேரத்தில், காலைக் கதிரவன் தன் கதிர்களால் வெப்பத்தைச் செலுத்த, பாலைத் தன்மையைக் கொண்ட நீண்ட பாலை வழியையுடைய சுரத்தில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி,
குறிப்பு:
வேனில் நின்ற (9) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இளவேனிற் பருவம் நிலைபெற்ற. வழிநாள் (9) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பின்னாகிய முதுவேனில்.
சொற்பொருள்:
அயில் உருப்பு அனைய - இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற, ஆகி - ஆகி, ஐது நடந்து - மெல்ல நடந்து சென்று, வெயில் உருப்புற்ற வெம்பரல் - வெயிலின் வெப்பத்தையுடைய சூடான பரல் கற்கள், கிழிப்ப - கிழிக்க, வேனில் நின்ற வெம்பத வழிநாள் - வேனில் நிலைபெற்ற காலத்திற்கு பின் வந்த முதுவேனில் காலத்தின் வெப்பமான நாள், காலை ஞாயிற்று - காலைக் கதிரவனின், கதிர் - கதிர்கள், கடா உறுப்ப - வெப்பத்தைச் செலுத்த, பாலை நின்ற - பாலைத் தன்மையைக் கொண்ட, பாலை நெடு வழி - நீண்ட பாலை வழி, சுரன் முதல் - பாலை நிலத்தில் (சுரன் - சுரம் என்பதன் போலி), மராஅத்த வரி நிழல் அசைஇ - கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி