பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்: 22

வையை


இப்பாடலின் இடையில் சில சொற்களும் இறுதிட்ட குறியும் கிடைக்கவில்லை

பாடியவர் : தெரியவில்லை
இசையமைத்தவர் : தெரியவில்லை
பண் : தெரியவில்லை

வையை

மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்

ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை . . . .[05]

விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று - அவன்
தானையின் ஊழி....தாவூக் கத்தின், . . . .[10]

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத -
... .... ..... ...... நீக்கிப் பு ... .... ..... ......
கான மலைத்தரை கொன்று மணல பினறி
வான மலைத்த ... .... ..... ...... வ ... .... ..... ......
... .... ..... ...... லைத்தவ மண முரசு எறிதா, . . . .[15]

தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,

மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு

பொறிவி யாற்றுறி -- துவர், புகை, சாந்தம்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
பிற தொழின ......ம் பின்பின் தொடர; . . . .[20]

செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி; . . . .[25]

வேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை, . . . .[30]

ஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர் -
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண் -
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின். . . . .[35]

திருமருத முன்துறைக் காட்சிகள்

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ...... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
ஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத் . . . .[40]

தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
...... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் -
தீம் புனல் வையைத் திருமருத முந்துறையால். . . . .[45]

கோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
... .... ..... ...... புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,