நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

அந்தப்புரத்தின் அமைப்பு
பாடல் வரிகள்:- 101 - 107
கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி
அறு அறு காலை தோறு அமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க, . . . .[105]
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் . . . .[101 - 107]
கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப் . . . .[105]
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
தாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
பொருளுரை:
கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை விளக்குகளின் கையில் ஏந்தப்பட்ட அழகான எண்ணையை ஊற்றும் அகல் நிறைய எண்ணையை ஊற்றி, பருத்த திரியைக் கொளுத்தி, அதன் நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எண்ணெய் குறையும்பொழுதெல்லாம் எண்ணையை ஊற்றித் திரியைத் தூண்டி, பல அறைகளிலும் உள்ள பரந்த இருளை நீக்கினார்கள். பெருமை பொருந்தியவனும் தலைமை உடையவனுமான பாண்டிய மன்னன் அல்லாது வேறு ஆடவர் எவரும் நெருங்க முடியாத அரிய காவலுடைய எல்லையில்,
குறிப்பு:
நெய் என்ற சொல் பசுவின் நெய்க்கும், எண்ணெய்க்கும் உபயோகிக்கப்பட்டது. நற்றிணை 175-4 - மீன் நெய், நற்றிணை 215-5 - மீன் நிணம் தொகுத்த ஊன் நெய். முல்லைப்பாட்டு 48-49 - நெய் உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட.
சொற்பொருள்:
யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் - கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை தன்னுடைய கைகளில் ஏந்தும், ஐ - வியப்பான, அழகான, அகல் - அகல், நிறைய நெய் சொரிந்து - நிறைய எண்ணையை ஊற்றி, நிறைய நெய்யை ஊற்றி, பரூஉத்திரி கொளீஇய - பருத்த திரியைக் கொளுத்தி (பரூஉ - இன்னிசை அளபெடை, கொளீஇய - சொல்லிசை அளபெடை), குரூஉத்தலை நிமிர் - நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எரி - தீச்சுடர், அறு அறு காலை தொறும் - எண்ணெய் குறையும்பொழுதெல்லாம், அமைவரப் பண்ணி - எண்ணையை ஊற்றித் தூண்டி, பல் வேறு பள்ளி தொறும் - பல அறைகளிலும், பாய் இருள் நீங்க - பரந்த இருள் நீங்க, பீடு கெழு சிறப்பின் பெருந்தகையல்லது - பெருமை பொருந்திய தலைமையுடைய பாண்டிய மன்னன் அல்லாது, ஆடவர் குறுகா - வேறு ஆடவர் நெருங்க முடியாத, அருங்கடி வரைப்பின் - அரிய காவலுடைய எல்லையில்