நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

அரண்மனையின் ஓசைகள்
பாடல் வரிகள்:- 093 - 100
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, . . . .[95]
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் . . . .[93 - 100]
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக் . . . .[95]
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மரு ளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் . . . .[100]
பொருளுரை:
பந்தியில் நிற்பதை வெறுத்து அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை புல்லை உண்டு கனைத்தது, தனிமை தோற்றுவித்த குரலுடன். நிலாவின் பயனை மன்னர் நுகரும்படியாக ஒளியுடைய பெரிய முற்றத்தில் சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட நீர்க்குழாயில் நிறைய நீர் கலங்கி அருவியாக மிகுந்த ஒலியுடன் விழுந்தது. அருகில், தழைத்த நீண்ட தோகை ஒதுங்க மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவுகின்றது. மயிலின் குரல் வயிர் என்ற இசைக் கருவியின் இனிமையான ஒலியைப் போன்று உள்ளது. அடர்ந்த மலையின் ஆரவாரம் போல் ஆரவாரித்தது அரண்மனை.
குறிப்பு:
அகநானூறு 254-12 - பணை நிலை முனஇய வினை நவில் புரவி. உணா - உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது
சொற்பொருள்:
பணை நிலை முனைஇய - பந்தியில் நிற்க வெறுத்து (முனைஇய - சொல்லிசை அளபெடை), பல் உளை புரவி - அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை, புல் உணாத் தெவிட்டும் - புல்லை உண்டு ஒலிக்கும், புலம்பு விடு குரலொடு - தனிமை தோற்றுவித்த குரலுடன், நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து - நிலாவின் பயனை நுகரும் பெரிய ஒளியுடைய முற்றத்தில், கிம்புரி பகு வாய் - சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட, அம்பணம் - நீர்க்குழாய், நிறைய - நிறைய, கலிழ்ந்து வீழ் அருவி - கலங்கி விழும் அருவி, பாடு விறந்து - ஒலி மிகுந்து, அயல - அருகில், ஒலி நெடும் பீலி ஒல்க - தழைத்த நீண்ட தோகை ஒதுங்க, மெல் இயல் கலி மயில் அகவும் - மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவும், வயிர் மருள் - வயிர் என்ற இசைக் கருவியைப் போன்று, இன் இசை - இனிமையான ஒலி, நளி மலைச் சிலம்பின் - அடர்ந்த மலையின் ஆரவாரம் போல், சிலம்பும் கோயில் - ஆரவாரிக்கும் அரண்மனை