நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

அரண்மனை வாயில்
பாடல் வரிகள்:- 079 - 088
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, . . . .[80]
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து . . . .[85]
ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் . . . .[78 - 88]
பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் . . . .[80]
துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந் . . . .[85]
தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
பொருளுரை:
ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பருத்த ஆணியால் கட்டி, சிவப்பு அரக்கைத் தடவி, மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, சிறப்பாக இணைத்து, உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகையைக் கதவுக்கு மேலே வைத்து (உத்தரக்கட்டை), மலரும் குவளை பூப் போன்ற புதிய கைப்பிடியை அமைத்து, தாழொடு சேர்த்த, பொருந்துவதாய் அமைந்த, கைத்தொழிலில் வல்லமை உடையவன் இணைத்ததால் இடைவெளி இல்லாது இருந்தது கதவு. அதில் வெண்கடுகின் சாந்தும் நெய்யும் தடவப்பட்டது. போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன் யானைகள் புகுமாறு, மலையில் குடைந்தது போல் உயர்ந்து இருந்தது, அரண்மனையின் வாயில்.
சொற்பொருள்:
ஒருங்கு உடன் வளைஇ - ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து (வளைஇ - சொல்லிசை அளபெடை), ஓங்கு நிலை வரைப்பின் - உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பரு இரும்பு பிணித்து - பருத்த ஆணியால் கட்டி, செவ்வரக்கு உரீஇ - சிவப்பு அரக்கைத் தடவி (உரீஇ - சொல்லிசை அளபெடை), துணை மாண் கதவம் பொருத்தி - மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, இணை மாண்டு - சிறப்பாக இணைத்து, நாளொடு பெயரிய கோள் - உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகை (உத்தரக்கட்டை), அமை - அமைந்த, விழு மரத்து - சிறந்த மரத்து (பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆச்சா, கருங்காலி முதலிய மரங்கள்), போது அவிழ் - மலரும் மலர்கள், குவளை - நீல மலர், புதுப்பிடி கால் அமைத்து - புதிய கைப்பிடி அமைத்து, தாழொடு குயின்ற - தாழொடு சேர்த்த, போர் அமை புணர்ப்பில் - பொருந்துவதாய் அமைந்த, கை வல் கம்மியன் - கைத்தொழிலில் வல்லமை உடையவன், முடுக்கலின் - இணைத்ததால், புரை தீர்ந்து - இடைவெளி இல்லாது, ஐயவி அப்பிய - வெண்கடுகு அப்பிய, நெய்யணி - நெய்யைத் தடவி, நெடு நிலை - உயர்ந்த நிலை, வென்று எழு கொடியோடு - போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன், வேழம் சென்று புக - யானைகள் புகுமாறு, குன்று குயின்றன்ன - மலையில் குடைந்தது போல், ஓங்கு நிலை வாயில் - உயர்ந்த வாயில்