நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

மகளிர் நிலை
பாடல் வரிகள்:- 053 - 056
கூந்தல் மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து . . . .[55]
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக் . . . .[53 - 56]
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து . . . .[55]
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக் . . . .[53 - 56]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் . . . .[55]
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் . . . .[55]
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
பொருளுரை:
பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை. அடர்ந்த கருமையானக் கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர். தகர மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து அதில் கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகில் மரத்துண்டுகளுடன் வெள்ளை கண்ட சருக்கரையைச் சேர்த்துப் புகைத்தனர்.
சொற்பொருள்:
கூந்தல் மகளிர் கோதை புனையார் - பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை, பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் - அடர்ந்த கருமையான கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர், தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து - தகரம் என்ற மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து, நறுமண மரவகை, இருங்காழ் அகிலொடு - கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகிலுடன், வெள் அயிர் புகைப்ப - வெள்ளை கண்ட சருக்கரையைப் புகைப்ப