நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


புறாவின் நிலை

பாடல் வரிகள்:- 045 - 052

மனை உறை புறவின் செங்கால் சேவல் . . . .[45]

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக, . . . .[50]

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக் . . . .[45 - 52]

பொருளுரை:

இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல் இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, செயலற்று, வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகையில் கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, காவலுடைய பெரிய மனைகளில் சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல்லில் சந்தனம், கத்தூரி போன்ற நறுமணமான பொருட்களை அரைக்க, வடநாட்டினர் தந்த வெள்ளை நிறத்தையுடைய வட்டக் கல் தென்திசையின் சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க,

குறிப்பு:

அகநானூறு 340 - வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து. மதலைப் பள்ளி மாறுவன இருப்ப (47) - நச்சினார்க்கினியர் உரை - கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்த கால் ஆறும்படி மாறி மாறி இருக்க. (கொடுங்கை = வீட்டின் வெளிப்புறத்தில் கூரைக்கு அடியில் உள்ள நீண்டு உறுப்புகள்).

சொற்பொருள்:

மனை உறை புறவின் செங்கால் சேவல் - இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா, இன்புறு பெடையொடு - தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன், மன்று தேர்ந்து உண்ணாது - ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல், இரவும் பகலும் மயங்கி - இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, கையற்று - செயலற்று, மதலைப் பள்ளி - வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகை, மாறுவன இருப்ப - கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, கடியுடை வியல் நகர் - காவலுடைய பெரிய மனைகள், சிறு குறுந்தொழுவர்- சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள், கொள் உறழ் நறுங்கல் - கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல், பல் கூட்டு மறுக - நறுமணமான பொருட்களை அரைக்க, வடவர் தந்த வான் கேழ் வட்டம் - வடநாட்டினர் தந்த, தென் புல மருங்கில் - தென்திசையில் இருந்த, சாந்தொடு துறப்ப - சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க