நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


தெருக்களில் திரியும் மக்கள்

பாடல் வரிகள்:- 029 - 035

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில், . . . .[30]

படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, . . . .[29 - 35]

பொருளுரை:

உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊரில் உள்ள ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், தழைக் கலந்த மாலையை அணிந்த பருமனான அழகான தோள்களையும் இறுக்கமான உடலையும் உடைய வலிமையான ஆண்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மிகவும் மகிழ்ந்து, நீர்த் துவலையின் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாது பகல் கழிந்த பொழுதிலும், முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்த அவர்கள், தங்களுக்கு வேண்டிய இடத்தில் திரிய,

குறிப்பு:

இரு கோட்டு அறுவையர் (35) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - முன்னும் பின்னும் தொங்கலாக நாலவிட்ட துகிலினை உடையராய். இரண்டு விளிம்பிலும் கரையமைந்த ஆடை எனினுமாம்.

சொற்பொருள்:

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் - ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், படலைக் கண்ணி - தழை மாலை, பரு - பருத்த, ஏர் - அழகிய, எறுழ் - வலிமை, திணி தோள் - உறுதியான தோள், முடலை யாக்கை - இறுக்கமான உடல், முழு வலி மாக்கள் - மிகுந்த வலிமையுடைய மக்கள், வண்டு மூசு தேறல் மாந்தி - வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மகிழ் சிறந்து - மிகவும் மகிழ்ந்து, துவலைத் தண் துளி - நீர்த் துவலையின் குளிர்ந்த துளிகள், பேணார் - பொருட்படுத்தாதவர்கள், பகல் இறந்து - பகல் கழிந்து, இரு கோட்டு அறுவையர் - முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்தவர்கள், வேண்டுவயின் இடம் திரிதர - வேண்டிய இடத்தில் திரிய