பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பொருநராற்றுப்படை


நில மயக்கமும் நல் ஆட்சியும்

பாடல் வரிகள்:- 214 - 231

தேனெய்யொடு கிழங்குமாறியோர்
மீனெய்யொடு நறவுமறுகவுந் . . . .(215)

தீங்கரும்போ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவுந் 217

பொருளுரை:

மயிலானது முல்லை நிலத்துப் புறவு சலித்தால் நெய்தல் நிலத்தில் பூத்திருக்கும் புன்னை மரத்துக்குச் சென்றுவிடும். அருகில் சுறாமீன் வந்துபோகும் கடலலை மோதும். அதில் வாழும் இறால் மீனைத் தின்ற நாரை பூத்திருக்கும் அதே புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும். கடலோரப் புன்னை மரத்தில் இருக்கும்போது கடலலை ஓசையை வெறுத்து அந்த மரத்தை விட்டுவிட்டு நாரை பனைமர மடலுக்குப் பறந்து செல்லும். அதுவும் சலித்தால் தென்னை மடலுக்குச் செல்லும். அதிக உயரம் பறக்க முடியாத மயில் குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தில் அமரும். காந்தள் பூத்திருக்கும் இடத்திற்குச் செல்லும். அருகிலுள்ள மீனவர் பாக்கத்துக் குடிசைப் பகுதியில் இருக்கும் நாகமரத்தில் பாலைநில மக்கள் தம் உடுக்கு போன்ற குடுகுடுப்பைகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பர். அது காற்றில் ஆடும்போது ஓசை உண்டாகும். வண்டுகள் இசை பாடும். இந்த இசைக்கு ஏற்ப மயில் தோகை விரித்து ஆடும். இப்படிப் பல்வேறு நிலமேடுகளில் இடம் பெயர்ந்து மயில் ஆடும். தேன்நெய்க்குக் கிழங்கு, மீன்நெய்க்கு நறவு, மதுவுக்கு மான்கறி என்று பண்டமாற்று வாணிகம் பல்வேறு மணல்மேடுகளில் நடைபெறும்.

குறிஞ்சி பரதவர் பாட நெய்த
னறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட வகவர் . . . .(220)

நீனிற முல்லைப் பஃறினை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமந்தி கழிமூழ்க
கழிநாரை வரையிறுப்பத் . . . .(225)

தண்வைப்பினா னாடுகுழீஇ
மண்மருங்கினான் மறுவின்றி
யொருகுடையா னொன்றுகூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ . . . .(230)

லன்னோன் வாழி வென்வேற் குரிசில் . . . .(214 - 231)

பொருளுரை:

பண் பாடுவதிலும் மயக்கம் நேரும். நெய்தல் நிலத்துப் பரதவர் குறிஞ்சிப்பண் பாடுவர். குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தல் பூவைச் சூடுவர். முல்லை நிலத்துக் கானவர் மருதப்பண் பாடுவர். பாலை நிலத்து அகவர் முல்லைத்திணைப் பண்ணைப் பாடுவர். கானக்கோழி மருத நிலத்து நெற்கதிர்களைக் குத்தித் தின்னும். மருத நிலத்து மனைக்கோழி முல்லை நிலத்துத் தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும். மலையில் வாழும் மந்தி கடலோர உப்பங்கழிகளில் குளிக்கும். உப்பங்கழி நாரை மலைமரங்களில் இருக்கும். இப்படி எங்கும் நீரின் தண்மை-வளம் மிக்க நாடு காவிரி நாடு. மண்ணின் தண்மையால் மறு இல்லாதது. காவிரி நாடு என்னும் பெயரோடு அது ஒன்றுபட்டிருந்தது. இதனை நட்பும் அறனும் பூண்டு ஒருகுடைக்கீழ்ச் செங்கோல் செலுத்திக் கரிகாலன் ஆண்டு வந்தான். அவன் வாழ்க.