பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பொருநராற்றுப்படை

சோழ நாட்டின் வளமும் வனப்பும்
பாடல் வரிகள்:- 178 - 213
கரைசூழ்ந்த வகன்கிடக்கை
மாமாவின் வயின்வயினெற் . . . .(180)
றாழ்தாழைத் தண்டண்டலைக்
கூடுகெழீஇய குடிவயினாற்
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின்
மனைநொச்சி நிழலாங்க . . . .(185)
ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு
பொருளுரை:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளங்களும் காவிரி புரக்கும் கரிகாலன் நாட்டில் மயங்கிக் கிடந்தன. பாலை நிலத்தின் பாங்கும் பாவிக் கிடந்தது. கடற்கரையில் மாமரங்கள். அவற்றை அடுத்துத் தாழை மரங்கள். தாழைமரக் கழிகளை அடுத்து வளவயற் சோலை (தண்டலை) குடில்களில் கூலம் சேமிக்கும் குதிர்க் கூடுகள். கருங்காக்கைகள் அக்குடியில் வாழும் மக்கள் வைத்த நெல்லஞ் சோற்றைத் தின்று சலித்தபோது வீட்டு நொச்சிக்குக் கீழே பொறித்திருக்கும் ஆமைக் குஞ்சுகளைக் கவர்ந்துண்ணப் பார்க்கும். தாய்-ஆமை அதன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு
பொருளுரை:
இளைய மகளிர் வண்டல் விளையாடுவர். இளைய காளையர் முதியோரின் மேற்பார்வையில் அவையில் பகைமுரணிய விளையாட்டுகளில் ஈடுபட்டுத் தம் திணவை வெளிப்படுத்துவர்.
மடக்கண்ண மயிலாலப் . . . .(190)
பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி
யறைக்கரும்பி னரிநெல்லி
னினக்களம ரிசைபெருக
வறளடும்பி னிவர்பகன்றைத் . . . .(195)
தளிர்ப்புன்கின் றாழ்காவி
னனைஞாழலொடு மரங்குழீஇய
வவண்முனையி னகன்றுமாறி
யவிழதளவி னகன்றோன்றி
னகுமுல்லை யுகுதேறுவீப் . . . .(200)
பொற்கொன்றை மணிக்காயா
நற்புறவி னடைமுனையிற்
பொருளுரை:
முடம் பட்டுக் கிளை தாழ்ந்திருக்கும் காஞ்சிமரம். செம்மாந்து ஓங்கியிருக்கும் மருதமரம் இரண்டிலும் மயில் ஏறி ஆட்டம் காட்டும். பசிக்கும் போது பறந்தோடிப் பாகல் பழத்தைத் தின்னும். அடுத்திருக்கும் பலாச்சுளைகளையும் தின்னும். கரும்பு வெட்டும்போதும் நெல் அறுக்கும்போதும் களமர் (= உழவர்) இசைப் பாடல்கள் பாடுவர். இதனைக் கேட்டுக்கொண்டு மயில் ஆடும். அடும்பு பகன்றை முதலான கொடிகளும் புன்கு ஞாழல் முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் மருத நிலக் காவிலும் அந்த மயில் விளையாடும். இந்த இடங்கள் சலித்துப் போனால் தளவம், தோன்றி, முல்லை முதலான பூப்புதர்களும் கொன்றை, காயா முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் முல்லை நிலப் புறவுத் தோட்டத்திற்குச் சென்று விளையாடும். இங்கும் சலிப்பு நேர்ந்தால் …
திறவருந்திய வினநாரை
பூம்புன்னைச் சினைச்சேப்பி . . . .(205)
னோங்குதிரை யொலிவெரீஇத்
தீம்பெண்ணை மடற்சேப்பவுங்
கோட்டெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தண் மலர்நாகத்துத்
துடிக்குடிஞைக் குடிப்பாக்கத் . . . .(210)
தியாழ்வண்டின் கொளைக்கேற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயரத் . . . .(178 - 213)