பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பொருநராற்றுப்படை

அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
பாடல் வரிகள்:- 123 - 129
சிரறியவன் போற் செயிர்த்த நோக்கமொடு
பொருளுரை:
கொல்லை என்னும் புன்செய் நிலத்தை உழும் கொழுவைப் போல எங்களின் பல்லானது இரவும் பகலும் புலால் உணவைத் தின்று தின்று மழுங்கிப் போயிற்று. மூச்சு முட்ட முட்ட உணவைத் தின்று விட்டோம். அதனால் உணவைக் கண்டாலே வெறுப்பால் கோவம் வந்தது. எனவே ஒருநாள் வாய் திறந்து சொல்லி விட்டோம் “உன்மீது சினந்தெழுந்த பகைவரின் திறைப்பொருள் உனது துறையெல்லாம் பரந்து கிடக்க வைத்திருக்கும் செல்வத் திருமகனே. நாங்கள் எங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம்” - என்று மெதுவாகச் சொன்னோமாக… “எம் தோழமையை விட்டுச் செல்கிறீர்களா” என்று சொல்லிச் சினங்கொண்டவன் போலப் பார்த்தான்.
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையிற் றரத்தர யானு
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
டின்மை தீர வந்தனென் வென்வே . . . .(123 - 129)
பொருளுரை:
உடுக்கு போல் அடி வைக்கும் குட்டியானையோடும், பெண்யானையோடும் சேர்ந்து நிற்கும் ஆண்யானை என்று பலவற்றையும் கொண்டுவந்து நிறுத்தினான். வேண்டியவற்றைக் கொண்டு செல்லுங்கள் என்றான். அவனுக்குத் தெரிந்த எண்ணிக்கை அளவில் அவன் மேலும் மேலும் கொண்டு வந்து நிறுத்தினான். எங்களது தகுதியை நாங்கள் அளந்து பார்த்துக் கொண்ட நிலையில் வேண்டுவனவற்றை மட்டும் கொண்டுவந்து விட்டோம். எங்களது வறுமை தீரும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டோம்.