பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பொருநராற்றுப்படை

அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
பாடல் வரிகள்:- 074 - 089
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் . . . .(75)
கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப்
பருகு வன்ன வருகா நோக்கமோ
டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
யீரும் பேனு மிருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை . . . .(80)
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
பொருளுரை:
அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான். கொடை நல்கி உதவி செய்வதற்கென்று அரண்மனையில் தனி இடம் இருக்கும். அதற்கு வேளாண் வாயில் என்று பெயர். அந்த வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான்.
தரவுரி யன்ன வறுவை நல்கி
மழையென மருளு மகிழ்செய் மாடத்
திழையணி வனப்பி னின்னகை மகளிர் . . . .(85)
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
வார வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன் . . . .(74-89)
பொருளுரை:
அவன் தந்தது பூப்போட்ட புத்தாடை. அது பாம்புத்தோல் போல் மெல்லியது. என்றாலும் பிறரது நோக்கம் நுழைய முடியாதது. பிறரால் உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியாத்து. மழைக்காலம் போல இருக்கும் குளுகுளு மாடத்தில் எங்களை இருக்கச் செய்து மகிழ்வித்தான். போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர். அவர்கள் நகைகளைப் போட்டுக் கொண்டிருந்த அழகுடன் முகம் புன்னகை பூக்க வந்தனர். மீண்டும் மீண்டும் பொற்கலம் நிறையும்படி போக்கில் உணவை வார்த்தனர். அவர்கள் தரத்தர வாங்கி எங்களது வருத்தம் போகும்படி உண்டோம்.எங்களது துன்பத்தை யெல்லாம் போக்கிக் கொண்டு பெருமிதச் செருக்கோடு நின்றோம். அப்போது…