பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பொருநராற்றுப்படை

பரிசு பெற்றோன் பாடின முறை
பாடல் வரிகள்:- 061 - 073
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி யேழின் கிழவ
பொருளுரை:
கோடியல் தலைவ நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!
னிழுமென் சும்மை யிடனுடை வரைப்பி . . . .(65)
னசையுநர்த் தடையா நன்பெரு வாயி
லிசையேன் புக்கெ னிடும்பை தீர
வெய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி . . . .(70)
யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
பொருளுரை:
யானும் அன்று ஒருநாள் ( கரிகாற் பெருவளத்தான் ) அரணமனை வாயிலுக்குள் நுழைந்து சென்று வெள்ளி முளைக்கும் விடியல் வேளையில் என் தடாரிப் பறையை முழக்கி ஒன்றே ஒன்று சொல்லத் தொடங்கிய போதே அவன் என்னைப் பேணத் தொடங்கி விட்டான். அன்று நான் பழுத்த மரத்தை நினைத்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை அவனது அரண்மனையில் இழும் என்னும் சும்மை. அதாவது அமைதி ஒலி. . அவனது அரண்மனையின் பெருவாயிலில் அவனை விரும்பிப் பார்க்கச் செல்வோரைத் தடுக்கும் வழக்கம் இல்லை. உள்ளே நுழையும் போது நான் எந்த இசையையும் எழுப்பவில்லை. என் உடம்பு இளைத்திருந்தது. உள்ளம் சோர்ந்து போயிருந்தது. எனினும் என் இடும்பை தீர வேண்டுமே! தடாரி என்னும் குடுகுடுப்பையை அடித்தேன். படமெடுத்தாடும் பாம்பைப் பிடித்திருப்பது போல் தடாரியைப் பிடித்துக் கொண்டு ஆட்டினேன். பாம்பு நாக்கைப்போல் அதில் இருந்த அரக்குமுடித் துத்தியானது தடாரியை அடிக்க அது ஒலித்தது. அதன் இருபுறக் கண்ணிலும் மோதி அது பாணி இசையைத் தந்தது.
லொன்றியான் பெட்டா வளவையி னொன்றிய . . . .(61-73)