பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பொருநராற்றுப்படை

பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பாடல் வரிகள்:- 053 - 060
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போலப் . . . .(55)
பாடல் பற்றிய பயனுடை யெழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
பொருளுரை:
எழாஅல் தலைவ, கோடியல் தலைவ, புகழ் மேம்படுந, ஏழின் கிழவ என்றெல்லாம் பொருநனை விளித்து அவனை ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். வழியில் கடவுட் கடன் புலவரும் பொருநர் கூட்டமும் நிழலைத் தேடிச் சென்றனர். நாள்தோறும் யானைகள் நடமாடும் காடு அது. பாடினி பாட்டுப் பாடினாள். அப் பாட்டிசைக்கு ஏற்பவும், யாழிசைக்கு ஏற்பவும் காட்டு வழியில் யானைகள் நடைபோட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டே வந்தன. யானையின் நிழலில் அல்கி அவர்கள் இளைப்பாறுவதும் உண்டு. கானத்தில் இலை உதிர்ந்த மராம் மரங்கள் இருந்தன. அம் மரங்களால் கிடைத்த நிழல் வலைவிரிப்பின்கீழ்க் கிடைக்கும் நிழல்போல் இருந்தது. வெயிலின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சென்ற அவர்கள் அந்த அருநிழலில் தங்கி இளைப்பாறினர். அங்கே கடவுளுக்கு அமைத்த கற்கோயில் இருந்தது. (மராமர நிழல் என்பதால் அது மலைக்கடவுள் முருகன் கோயிலாக இருக்கலாம்) அங்கே தம் இசையை எழுப்பி அந்தக் கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தனர். கோடியர் தலைவ, கேள் மூவேந்தர் தம் பெருமை மிக்க செல்வத்தால் பெரும்பெயர் பெற்று, எதையும் தாங்கும் இதயத்தோடு முயற்சி மேற்கொண்டு ஒழுகுபவர்கள் அத்தகைய மூவேந்தரும் ஒன்று கூடியிருக்கும்போது அவர்களது படையானது முரசை முழக்கும்போது எழுச்சி மிக்க இசை எழும்புவது போல, பொருநர் தம் எழால் முரசை முழக்கியும், யாழை மீட்டியும் பாடிக்கொண்டு கோடியல் தலைவனோடு பொருநர் கூட்டம் அக் கடவுள் கோட்டத்தில் தங்கியிருந்தது. புலவர் அந்தக் கோடியர் தலைவனை (யாழோர் கூட்டத்துத் தலைவனை), (பொருநனை) விளித்துச் சொல்லத் தொடங்கினார்.
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந . . . .(53 - 60)