பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

திருமாவளவனின் பெருமைகள், திருமாவளவன் அரசுரிமை பெறல்
பாடல் வரிகள்:- 220 - 227
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப் புக்காங்கு,
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் . . . .[225]
செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,
உருகெழு தாயம் ஊழின் எய்தி . . . .[220-227]
கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார் . . . .[225]
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பொருளுரை:
கூர்மையான நகங்களையுடைய வளைந்த வரிகளையுடைய புலிக்குட்டி, கூட்டுக்குள் அடைபட்டு வளர்ந்தாற்போல் அடைக்கப்பட்டு மன வலிமையுடன் முதிர்ந்து, ஏறுதற்கு அரிய கரையினை இடித்துத் தந்தத்தினால் குத்திக் குழியைப் பாழ்படுத்தி, பெரிய தும்பிக்கையையுடைய களிற்று யானையானது தன்னுடைய பிடியிடம் சென்றாற்போல், தன்னுடைய உணர்வு கூர்மையாக உணரும்படி ஆராய்ந்து, பகைவருடைய மிகுந்த காவலுடைய சிறையின் மதிலின் மீது ஏறி, தன்னுடைய வாளை உறையிலிருந்து நீக்கி முறைப்படி அச்சம் பொருந்திய அரசுரிமையை அடைந்தான்.
சொற்பொருள்:
கூர் உகிர் கொடுவரி - கூர்மையான நகங்களையுடைய வளைந்த வரிகளையுடைய புலி, குருளை - குட்டி, கூட்டுள் வளர்ந்தாங்கு - கூட்டுக்குள் அடைபட்டு வளர்ந்தாற்போல், பிறர் பிணி அகத்து இருந்து - பகைவருடைய காவலிலிருந்து, பீடு காழ் முற்றி - பெருமை வைரமாக முதிர்ந்து, அருங்கரை - ஏறுதற்கு அரிய கரை, கவிய - இடிய, குத்தி - தந்தத்தினால் குத்தி, குழி கொன்று - குழியைப் பாழ்படுத்தி, பெருங்கை யானை - பெரிய தும்பிக்கையையுடைய களிற்றுயானை, பிடி புக்காங்கு - தன்னுடைய பிடியிடம் சென்றாற்போல், நுண்ணிதின் உணர - தன்னுடைய உணர்வு கூர்மையாக உணர, நாடி - ஆராய்ந்து, நண்ணார் செறிவுடை திண் காப்பு ஏறி - பகைவருடைய மிகுந்த காவலுடைய சிறையின் மதிலின் மீது ஏறி, வாள் கழித்து உருகெழு - தன்னுடைய வாளை உறையிலிருந்து நீக்கி அச்சம் பொருந்திய, தாயம் - அரசுரிமை, ஊழின் எய்தி - முறைப்படி அடைந்து