பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

பன்னாட்டினரும் இனிது உறையும் புகார்
பாடல் வரிகள்:- 213 - 218
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, . . . .[215]
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம் . . . .[213-218]
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு . . . .[215]
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
பொருளுரை:
பல மக்கள் கூட்டங்களுடனும் பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார் விழாக்கள் நடத்தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், பழி இல்லாத நாடுகளில் மொழிகள் பலவற்றை அறிந்த, தம்முடைய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள், ஒன்றாக இனிமையாக வாழும், குறையாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினத்தை
சொற்பொருள்:
பல் ஆயமொடு - பல மக்கள் கூட்டங்களுடன், பதி பழகி - நாடுகளில் பழகி, வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் - வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார், சாறு அயர் - விழாக்கள் நடத்தும், மூதூர் - தொன்மையான ஊர், சென்று தொக்காங்கு - சென்று கூடினாற்போல், பழி தீர் தேஎத்து - பழி இல்லாத நாடுகளில், மொழி பல பெருகிய - மொழிகள் பலவற்றை அறிந்த, புலம் பெயர் மாக்கள் - தம்முடைய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள், கலந்து இனிது உறையும் - ஒன்றாக இனிமையாக வாழும், முட்டாச் சிறப்பின் பட்டினம் - குறையாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினம்
குறிப்பு:
புலம் பெயர் மாக்கள் (217) - நச்சினார்க்கினியர் உரை - சோனகர், சீனர் முதலியோர்.