பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

வணிகர் குடிச்சிறப்பு
பாடல் வரிகள்:- 206 - 212
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது, கொடுப்பதூஉங் குறைகொடாது, . . . .[210]
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை . . . .[206-212]
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது . . . .[210]
பல்பண்டம் பகர்ந்துவீசுந்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பொருளுரை:
கலப்பையின் நீண்டத் தடியின் நடுவிடம் போல, நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சினோர், பழிக்கு அஞ்சி உண்மையைக் கூறி, தம்முடையதையும் பிறருடையதையும் ஒப்பாக எண்ணி, தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாகக் கொள்ளாது, தாம் விற்கும் பொருட்களையும் குறைவாகக் கொடுக்காது, பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொன்றுத் தொட்டு செல்வம் ஈட்டிய வணிகர்களும்,
சொற்பொருள்:
நெடு நுகத்து பகல் போல - கலப்பையின் எருதுகளைப் பிணிக்கும் நீண்டத் தடியின் நடுவிடம் போல, நடுவு நின்ற நல் நெஞ்சினோர் - நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சினோர், வடு அஞ்சி - பழிக்கு அஞ்சி, வாய்மொழிந்து - உண்மையைக் கூறி, தமவும் பிறவும் - தம்முடையதையும் பிறருடையதையும், ஒப்ப நாடி - ஒப்பாக எண்ணி, கொள்வதூஉம் மிகை கொளாது - தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாக கொள்ளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது - தாம் விற்கும் பொருட்களையும் குறைவாக கொடுக்காது, பல் பண்டம் பகர்ந்து வீசும் - பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொல் கொண்டி - தொன்றுத் தொட்டு ஈட்டிய, துவன்று இருக்கை - நிறைந்த இடங்கள்
குறிப்பு:
நெடுநுகம் (206) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கலப்பையில் எருதுகளைப் பிணைக்கும் நீண்ட தடி. இதனை நுகத்தடி எனவும் கூறுப. இத் தடியின் நடுவிடம் தெரிதற் பொருட்டு ஓர் ஆணி தைத்திருப்பர். சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).