பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல் இயல்புகள்

பாடல் வரிகள்:- 194 - 205

நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும்,
ஏமாப்ப இனிது துஞ்சிக் . . . .[195]

கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர் பேணியும், ஆவுதி அருத்தியும், . . . .[200]

நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கைக்
கொடும் மேழி நசை உழவர் . . . .[194-205]

பொருளுரை:

நீரின் நடுவிலும் நிலத்தின் மேலும் மகிழ்ந்து இனிமையாகத் துயின்று, சுற்றம் தழைத்து, பகைமையைக் கருதாமல் மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும், ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலையையும் களவையும் நீக்கியும், தேவரைப் போற்றியும், வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்டங்களைச் செய்து வருவோர்க்குக் கொடுத்ததும், சமைக்காத அரிசி போன்ற உணவைக் கொடுத்ததும், அறம் குறையாது, குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, வளைந்த கலப்பையை விரும்பும் உழவர்களும்,

சொற்பொருள்:

நீர் நாப்பண்ணும் - நீரின் நடுவிலும், நிலத்தின் மேலும் - நிலத்தின் மேலும், ஏமாப்ப - மகிழ்ந்து, இனிது துஞ்சி - இனிமையாகத் துயின்று, கிளை கலித்து - சுற்றம் தழைத்து, பகை பேணாது - பகைமையை கருதாமல், வலைஞர் முன்றில் மீன் பிறழவும் - மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும், விலைஞர் குரம்பை மா ஈண்டவும் - ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலை கடிந்தும் - கொலையை நீக்கியும், களவு நீக்கியும் - களவை நீக்கியும், அமரர் பேணியும் - தேவரைப் போற்றியும், ஆவுதி அருத்தியும் - வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல் ஆனொடு பகடு ஓம்பியும் - நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறையோர் புகழ் பரப்பியும் - நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்ணியம் அட்டியும் - பண்டங்களைச் செய்தும், பசும் பதம் கொடுத்தும் - சமைக்காத உணவைக் கொடுத்ததும், புண்ணியம் முட்டா - அறம் குறையாது, தண் நிழல் வாழ்க்கை - குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, கொடும் மேழி - வளைந்த கலப்பை, நசை உழவர் - விரும்பும் உழவர்கள்