பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

விழா நீங்காத கடை வீதி
பாடல் வரிகள்:- 146 - 158
பாசிழைப் பகட்டு அல்குல்,
தூசு உடைத் துகிர் மேனி,
மயில் இயல், மான் நோக்கின்,
கிளி மழலை, மென் சாயலோர், . . . .[150]
வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன,
செறி தொடி முன் கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் . . . .[155]
குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து . . . .[146-158]
பாசிழைப் பகட்டல்குற்
றூசுடைத் துகிர்மேனி
மயிலியன் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர் . . . .[150]
வளிநுழையும் வாய்பொருந்தி
யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் . . . .[155]
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
பொருளுரை:
சிவந்த அடியையும், நெருங்கிய தொடையையும், புதிய அணிகலன்களையும், அகன்ற அல்குலையும், தூய்மையான உடையையும், பவளம் போன்ற உடலையும், மயிலின் இயல்பையும், மானின் பார்வையும், கிளியின் மழலையும், மென் சாயலையும் கொண்ட பெண்கள், காற்று வரும் சாளரம் வழியாக நோக்கி, உயர்ந்த மலை அருகில் நுண்மையான தாதுக்களை உதிர்க்கும் காந்தள் மலர்களின் அழகிய இதழ்களைப் போன்று உள்ள தங்களுடைய நிறைய வளையல் அணிந்த கைகளைக் கூப்பி வணங்கினார்கள். முருகனுக்காக வெறியாட்டம் ஆடிய பெண்களின் பாடலில் இணைந்து புல்லாங்குழல் ஒலிக்க, யாழ் இசைக்க, முழவு முழங்க, முரசு முழங்க எடுத்த நீங்காத விழாக்களைக் கொண்ட அகன்ற கடைவீதியில்,
சொற்பொருள்:
சேவடி - சிவந்த அடி, செறி குறங்கின் - நெருங்கிய தொடையுடன், பாசிழை - புதிய அணிகள், பகட்டு அல்குல் - அகன்ற அல்குல் (இடைக்கு கீழ் உள்ள பகுதி), தூசு உடை - தூய்மையான உடை, பஞ்சு ஆடை, துகிர் மேனி - பவளம் போன்ற உடல், மயில் இயல் - மயிலின் இயல்பு, மான் நோக்கு - மானின் பார்வை, கிளி மழலை - கிளியின் மழலை, மென் சாயலோர் - மென்மையான சாயலையுடைய பெண்கள், வளி நுழையும் வாய் - காற்று வரும் வழி, பொருந்தி - சேர்ந்து, ஓங்கு வரை - உயர்ந்த மலை, மருங்கின் - அருகில், நுண் தாது உறைக்கும் - நுண்மையான தாதுக்களை உதிர்க்கும், நுண்மையான தேனை உதிர்க்கும், காந்தள் - காந்தள் மலர்கள், அம் துடுப்பின் - அழகிய இதழ்களைப் போன்று, கவி - கவிழ்ந்த, குலை அன்ன - குலைகளைப் போல், செறி தொடி - அடர்ந்த வளையல்கள், முன் கை கூப்பி - கைகளைக் கூப்பி வணங்கி, செவ்வேள் வெறியாடல் மகளிரொடு செறிய - முருகனுக்காக வெறியாட்டம் ஆடிய பெண்களுடன் பாடலில் இணைந்து, தாஅய்க் குழல் அகவ - பரந்து புல்லாங்குழல் ஒலிக்க, யாழ் முரல - யாழ் இசைக்க, முழவு அதிர - முழவு முழங்க, முரசு இயம்ப - முரசு முழங்க , விழவு அறா - நீங்காத விழாக்கள், வியல் ஆவணத்து - அகன்ற கடைவீதியில்