பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

வரி வசூலிப்போர் தன்மை
பாடல் வரிகள்:- 116 - 125
தூஉ எக்கர்த் துயில் மடிந்து,
வால் இணர் மடல் தாழை
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும் . . . .[120]
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅபோல,
வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது . . . .[116-125]
தூஉவெக்கர்த் துயின்மடிந்து
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியன்றெருவி
னல்லிறைவன் பொருள்காக்குந் . . . .[120]
தொல்லிசைத் தொழின்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
றேர்பூண்ட மாஅபோல
வைகறொறு மசைவின்றி
யுல்குசெயக் குறைபடாது . . . .[125]
பொருளுரை:
பெரிய காவிரி ஆறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கூட்டும் கரையில் உள்ள தூய மணலில் துயின்று, வெள்ளை மலர்க் கொத்துக்களையும் மடலையும் உடைய தாழையுடைய கடற்கரையின்கண் உள்ள அகன்ற தெருவில், நல்ல மன்னனின் பொருட்களைக் காக்கும், பழைய புகழையுடைய சுங்கத் தொழிலைச் செய்பவர்கள், சுடும் சினத்தை உடைய கதிர்களையுடைய கதிரவனின் தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல, நாள்தோறும், சோம்பல் இல்லாது சுங்க வரியை குறையாமல் கொள்வார்கள்.
சொற்பொருள்:
மாஅ காவிரி - பெரிய காவிரி ஆறு, மணம் கூட்டும் - மலர்களின் மணங்களைக் கூட்டும், தூஉ எக்கர் - கரையில் உள்ள தூய மணலில், துயில் மடிந்து -துயில் கொண்டு, வால் இணர் - வெள்ளை மலர்க் கொத்துக்கள், மடல் தாழை - மடலையும் உடைய தாழை, வேலா - கரை, ஆழி - கடல், வியன் தெருவில் - அகன்ற தெருவில், நல் இறைவன் பொருள் காக்கும் - நல்ல மன்னனின் பொருட்களைக் காக்கும், தொல் இசை - பழைய புகழ், தொழில் மாக்கள் - சுங்கத் தொழிலைச் செய்பவர்கள், காய் சினத்த கதிர்ச் செல்வன் - சுடும் சினத்தை உடைய கதிர்களையுடைய கதிரவன், தேர் பூண்ட மாஅ போல - தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல, வைகல் தொறும் - நாள்தோறும், அசைவு இன்றி - மடிந்திராது, சோம்பல் இல்லாது, உல்கு செய - சுங்க வரியை கொள்ள, குறைபடாது - குறையாமல்
குறிப்பு:
வேலாழி (119) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வேலா - கரை, ஆழி - கடல். ஆழிவேலா என, மாறிக் கடற்கரையின் தெரு என்க, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வேலை ஆழி என்ற சொற்கள் விகாரத்தால் ஐ கேட்டு, வேலாழி என வந்தன. இனி, வேலா ஆழி என்ற இரண்டு சொற்கள் வடமொழித் தீர்க்கசந்திபோல வந்தன என்பாரும், ‘ஆழி’என்ற சொல்லின் முதல் எழுத்தோ ‘வேலா’ என்ற சொல்லின் ஈற்றெழுத்தோ தொக்கு வந்த என்பாருமுளர், வேலா - கடற்கரையென்ற பொருளுள்ள வடசொல்.