பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள்

பாடல் வரிகள்:- 106 - 115

துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், . . . .[110]

நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்ந்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான் . . . .[106-115]

பொருளுரை:

தங்கள் கணவருடன் கூடிய மடப்பத்தை உடைய பெண்கள், தாங்கள் அணிந்திருந்த பட்டு ஆடையை நீக்கி, வெள்ளை ஆடையை உடுத்தி, கள்ளை நீக்கி மதுவைக் குடித்தும், கணவர்கள் சூட வேண்டிய மலர்க் கண்ணியை மகளிர் சூடவும், பெண்களின் மாலையை ஆண்கள் அணியவும், வளைந்த படகுகளையுடைய மீன் பிடிக்கும் பரதவர்கள் உயர்ந்த தூண்கள் உடைய மாடங்களில் உள்ள ஒளியுடைய விளக்குகளை எண்ணவும், மக்கள் பாடல்களை கேட்டும், நாடகங்களை விரும்பியும், வெண்ணிலாவின் பயனை அனுபவித்தும், கண் உறங்குவதற்கு காரணமான இரவில்,

சொற்பொருள்:

துணைப் புணர்ந்த - தங்கள் கணவருடன் கூடிய, மட மங்கையர் - மடப்பத்தை பெண்கள், இளம் பெண்கள், பட்டு நீக்கி - பட்டு ஆடையை நீக்கி, துகில் உடுத்து - வெள்ளை ஆடையை உடுத்தி, துகிலை உடுத்தி, மட்டு நீக்கி - கள்ளை நீக்கி, மது மகிழ்ந்து - மதுவைக் குடித்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - கணவர்கள் சூட வேண்டிய மலர்க் கண்ணியை மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் - பெண்களின் மாலையை ஆண்கள் அணியவும், நெடுங்கால் - உயர்ந்த தூண்கள், மாடத்து ஒள் எரி நோக்கி - மாடங்களில் உள்ள விளக்குகளை நோக்கி, கொடுந்திமில் பரதவர் - வளைந்த படகுகளையுடைய பரதவர், குரூஉச்சுடர் எண்ணவும் - ஒளியுடைய விளக்குகளை எண்ணவும், பாடல் ஓர்ந்தும் - பாடல்களை கேட்டும், நாடகம் நயந்தும் - நாடகங்களை விரும்பியும், வெண் நிலவின் பயன் துய்த்தும் - வெண்ணிலாவின் பயனை அனுபவித்தும், கண் அடைஇய கடைக் கங்குலான் - கண் உறங்குவதற்கு காரணமான இரவில்

குறிப்பு:

பட்டு நீக்கித் துகில் உடுத்தும் (வரிகள் 107-108) - நச்சினார்க்கினியர் உரை - பட்டுடுத்தவற்றை நீக்கிப் புணர்ச்சி காலத்திற்கு நொய்யவாகிய வெள்ளியவற்றை உடுத்தும், கள்ளுண்டலைக் கைவிட்டு காமபானத்தை உண்டு மகிழ்ந்தும். பரிபாடல் 20-21 - மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்.