பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்

பாடல் வரிகள்:- 084 - 093

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர், . . . .[85]

சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்,
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்,
புன் தலை இரும் பரதவர் . . . .[90]

பைந்தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து உண்டு ஆடியும் . . . .[84-93]

பொருளுரை:

விழுதையுடைய தாழையின் அடியில் உள்ள வெண்கூதாளத்தின் குளிர்ச்சியான மலர்களை அணிந்து, சினையை உடைய சுறா மீனின் கொம்பை நட்டி, மனையில் இருந்த வலிமையான கடவுளுக்குப் படைத்த, மடலையுடைய தாழையின் மலர்களை அணிந்தும் பனை மரத்தின் கள்ளைக் குடித்தும், உலர்ந்த தலையையுடைய கருமையான பரதவர்கள், பரந்த கருமையை உடைய குளிர்ந்த கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், தழை ஆடையை அணிந்த தங்களுடைய கருமையான பெண்களோடு தாங்கள் விரும்பும் உணவை உண்டும் விளையாடியும்,

சொற்பொருள்:

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர் - விழுதையுடைய தாழையின் அடியில் உள்ள வெண்கூதாளத்தின் குளிர்ச்சியான மலர்களை அணிந்தவர்கள், சினைச் சுறவின் கோடு நட்டு - சினையை உடைய சுறா மீனின் கொம்பை நட்டி, மனை சேர்த்திய வல் அணங்கினான் - மனையில் சேர்த்த வலிமையான கடவுளின் பொருட்டு, மடல் தாழை மலர் மலைந்தும் பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் - மடலையுடைய தாழையின் மலர்களை அணிந்தும் பனை மரத்தின் கள்ளைக் குடித்தும், புன் தலை இரும் பரதவர் - உலர்ந்த தலையையுடைய கருமையான பரதவர், உலர்ந்த தலையையுடைய பெரிய பரதவர், பைந்தழை மா மகளிரொடு - தழை ஆடையை அணிந்த தங்களுடைய கருமையான பெண்களோடு, பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது - பரந்த கருமையை உடைய குளிர்ந்த கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், உவவு - முழு நிலவுடைய நாள், மடிந்து உண்டு ஆடியும் - விரும்பும் உணவை உண்டும் விளையாடியும்

குறிப்பு:

சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).