பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


பரதவர்களின் இருப்பிடம்

பாடல் வரிகள்:- 078 - 083

கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடுகல்லின் அரண் போல,
நெடும் தூண்டிலில் காழ் . . . .[80]

சேர்த்திய குறுங்கூரை குடி நாப்பண்,
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில் . . . .[78-83]

பொருளுரை:

கேடயங்களை வரிசையாக வைத்து வேலை நட்டி செய்த நடுகல்லின் அரணைப் போல, நீண்ட தூண்டில் கோலைச் சாற்றி வைத்த குறுகிய கூரையை உடைய இல்லங்களுடைய குடியிருப்பு இருந்தது. அதன் நடுவில், நிலவில் உள்ள இருளைப் போல மீன் பிடிக்கும் வலை காயும் மணல் நிறைந்த முற்றங்கள் உள்ளன.

சொற்பொருள்:

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி - கேடயங்களை வரிசையாக வைத்து வேலை நட்டி, நடுகல்லின் அரண் போல - நடுகல்லின் அரணைப் போல, நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய குறுங்கூரை குடி - நீண்ட தூண்டில் கோலைச் சாற்றி வைத்த குறுகியக் கூரையை உடையக் குடியிருப்பு, நாப்பண் - நடுவே, நிலவு அடைந்த இருள் போல - நிலவில் சேர்ந்த இருளைப் போல, வலை உணங்கும் மணல் முன்றில் - வலை காயும் மணல் நிறைந்த முற்றங்கள்

குறிப்பு:

பட்டினப்பாலை 167 - பசு மெழுக்கில் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல். முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ. நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கும் மணல் (82-83) - அகநானூறு 20 - நிலவு மணல், அகநானூறு 200 - நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 3 - நிலவு மணல், நற்றிணை 159 - நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 - நிலவு மணல், குறுந்தொகை 123 - நிலவுக் குவித்தன்ன வெண் மணல்.