பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும் வேள்விச்சாலையும்

பாடல் வரிகள்:- 053 - 058

தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் . . . .[55]

மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் . . . .[53-58]

பொருளுரை:

தவம் செய்பவர்கள் இருக்கும் இடங்களையுடைய, மரங்கள் தழைத்துத் தாழ்ந்த சோலைகளில், விளங்குகின்ற சடையையுடைய முனிவர்கள், தீயுடன் வேள்விகள் செய்யும் நறுமண புகையை வெறுத்து, ஆண் குயில்கள் தங்களுடைய பெண் குயில்களுடன் விலகிப் போய், பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல் காக்கப்பட்ட ஊரில், கற்களை உண்ணும் அழகிய புறாக்களோடு, ஒதுங்கி இருக்கும் இடத்தில் சேரும்.

சொற்பொருள்:

தவப் பள்ளி - தவம் செய்பவர்கள் தங்குமிடம், தாழ் காவின் - தழைத்து தாழ்ந்த சோலைகளில், அவிர் சடை முனிவர் - விளங்குகின்ற சடையுடைய முனிவர்கள், அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை - தீயில் வேள்விகள் செய்யும் நறுமணமான புகை, முனைஇ - வெறுத்து, குயில் தம் மா இரும் பெடையோடு - குயில்கள் தங்களுடைய கருமையான பெண் குயில்களுடன், இரியல் போகி - விலகிப் போய், பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் - பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல் காக்கப்பட்ட ஊர், தூது உண் அம் புறவொடு - கற்களை உண்ணும் அழகிய புறாக்களோடு, துச்சில் சேக்கும் - ஒதுங்கி இருக்கும் இடத்தில் சேரும்

குறிப்பு:

தவப்பள்ளி (வரி 53) - நச்சினார்க்கினியர் உரை - தவஞ் செய்யும் அமண் பள்ளி பௌத்த பள்ளி.