பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
பாடல் வரிகள்:- 020 - 027
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும், . . . .[25]
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் . . . .[20-27]
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் . . . .[25]
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
பொருளுரை:
பெரிய இல்லத்தின் முற்றத்தில், ஒளியுடைய நெற்றியையும் மடப்பமுடைய நோக்கினையும் உடைய, பொருந்திய அணிகளை அணிந்த பெண்கள், காய வைத்த உணவை உண்ண வரும் கோழி மீது எறிந்த அவர்களுடைய வளைந்த கீழ்ப்பகுதியுடைய கனமான காதணிகள், பொன்னினால் செய்த சிலம்பினைக் காலில் அணிந்த சிறுவர்கள் குதிரை இல்லாமல் ஓட்டும் மூன்று உருளைகளையுடைய சிறிய தேரின் வழியைத் தடுக்கும். இவ்வாறு தடுக்கும் பகை மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத பெரிய பல குடிகளையுடைய செழிப்புடைய கடற்கரை ஊர்களையும்.
சொற்பொருள்:
அகல் நகர் வியன் முற்றத்து - பெரிய இல்லத்தின் முற்றத்தில், சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் - ஒளியுடைய நெற்றியையும் மடப்பமுடைய நோக்கினையும் உடைய பொருந்திய அணிகளை அணிந்த பெண்கள், உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த - காய வைத்த உணவை உண்ண வரும் கோழி மீது எறிந்த, கொடுங்கால் கனங்குழை - வளைந்த கீழ்ப்பகுதியுடைய கனமான காதணிகள், பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் - பொன்னினால் செய்த சிலம்பினை காலில் அணிந்த சிறுவர்கள் குதிரை இல்லாமல் ஓட்டும், முக்கால் சிறு தேர் - மூன்று உருளைகளையுடைய சிறிய தேர், முன் வழி விலக்கும் - வழியைத் தடுக்கும், விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா - தடுக்கும் பகை மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத, கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் - பெரிய பல குடிகளையுடைய செழிப்புடைய கடற்கரை ஊர்களையும்
குறிப்பு:
கனங்குழை (23)- பொ. வே. சோமசுந்தரனார் உரை - வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த குழை, நச்சினார்க்கினியர் உரை - வளைந்த இடத்தையுடைய பொன்னாற் செய்த மகரக்குழை.