முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
பாடல் வரிகள்:- 080 - 089
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, . . . .[85]
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின................ . . . .[80 - 89]
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையற்? கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல . . . .[85]
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
ளஞ்செவி நிறைய வாலின ...................
பொருளுரை:
காணாதவளாய், துன்புற்று, தலைவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைவு இல்லாத தனிமையுடன் நீண்ட நேரம் நினைத்து, தன்னைத் தேற்றியும் வழுக்கி ஓடும் தன்னுடைய வளையல்களை ஓடாமல் நிறுத்தியும், பெருமூச்சு விட்டும், அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கி, அணிகலன் நெகிழ்ந்து, பாவை விளக்கில் பருத்த சுடர் எரிய, சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில், கூடல்வாய்களில் இருந்து விழும் பலவாக முழங்குகின்ற பெரிய திரண்ட அருவியின் இனிய இசையைக் கேட்டவாறு கிடந்தாள் அரசி. அவளுடைய காதுகள் நிரம்பும்படி இருந்தன ஒலிகள்.
குறிப்பு:
அஞ்செவி (89) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - அழகிய காது, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகஞ் செவி, நச்சினார்க்கினியர் உரை - அகஞ் செவி. இலக்கணம்: இலக்கணம்: பரூஉ - இன்னிசை அளபெடை.
சொற்பொருள்:
காணாள் துயர் உழந்து - காணாதவளாக துன்புற்று, நெஞ்சு ஆற்றுப்படுத்த - அவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறை தபு புலம்பொடு - நிறைவு கெட்ட தனிமையுடன், நீடு நினைந்து - நீண்ட நேரம் நினைத்து, தேற்றியும் ஓடு வளை திருத்தியும் - தன்னைத் தேற்றியும் ஓடும் வளையல்களை ஓடாமல் நிறுத்தியும், மையல் கொண்டும் - கலக்கம் கொண்டும், ஒய்யென உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும், ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி - அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கி, இழை நெகிழ்ந்து - அணிகலன் நெகிழ்ந்து, பாவை விளக்கில் பரூஉச்சுடர் அழல - பாவை விளக்கில் பருத்த சுடர் எரிய, இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து - சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில், முடங்கு இறை சொரிதரும் - கூடல்வாய்களில் இருந்து விழும், மாத்திரள் அருவி - பெரிய திரண்ட அருவி, இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் - பலவாக முழங்குகின்ற இனிய இசையைக் கேட்டவாறு கிடந்தாள், அம் செவி நிறைய ஆலின - அழகிய காதுகள் நிரம்பும்படி ஒலித்தன