முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

பாசறையில் மன்னனின் மனநிலை
பாடல் வரிகள்:- 067 - 076
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத், . . . .[70]
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை . . . .[75]
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து, . . . .[67 - 76]
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் . . . .[70]
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை . . . .[75]
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பொருளுரை:
மன்னன் போரினை விரும்புவதால், உறக்கம் பெறாமல், பலவற்றை எண்ணினான். பகைவர்கள் எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால் பெண் யானைகளை மறந்த தன் ஆண் யானைகளைப்பற்றி எண்ணினான். யானைகளின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுப்பட்டுப் பாம்பு துடித்தாற்போல் விழுந்த போரில், தேன் பாயும் வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி செஞ்சோற்றுக் கடனுக்காக அழிந்த தன் மறவர்களை எண்ணினான். உடம்புக்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததாலே தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் தன் குதிரைகளைப்பற்றி நினைத்தான். ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்து, ஒரு கையைத் தலையுடன் கடகம் சேரும்படி வைத்து, நீண்ட நேரம் நினைத்தான்.
குறிப்பு:
கண்ணி நல் வலம் திருத்தி (71) - நச்சினார்க்கினியர் உரை - வஞ்சி மாலைக்கு நன்றாகிய வெற்றியை உண்டாக்கி. பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (70) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பரூஉக்கை பாம்பு பதைப்பன்ன துமிய என மாறுக. தோல் (72) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - தோலால் இயன்ற பக்கரைக்கு ஆகுபெயர், பொ. வே. சோமசுந்தரனார் உரை - தோல் பரிசை. இலக்கணம்: பெறாஅது - இசை நிறை அளபெடை, பரூஉ - இன்னிசை அளபெடை, தேம்பாய் - தேம் தேன் என்றதன் திரிபு.
சொற்பொருள்:
மண்டு - மிக்க, அமர் - போர், நசையொடு - விருப்பத்துடன், கண்படை பெறாஅது - உறக்கம் பெறாமல், எடுத்து எறி எஃகம் பாய்தலின் - எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால், புண் கூர்ந்து - புண் மிகுந்து, பிடி கணம் - மறந்த வேழம் - பெண் யானைகளை மறந்த ஆண் யானைகள், வேழத்து - யானைகளின், பாம்பு பதைப்பு அன்ன - பாம்பு துடித்தாற்போல், பரூஉக் கை - பருத்த தும்பிக்கை, துமிய - வெட்டப்பட, தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்தி - தேன் பாயும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் - செஞ்சோற்றுக் கடனுக்காக அழிந்த மறவர்களை எண்ணியும், தோல் துமிபு பைந்நுனைப் பகழி மூழ்கலின் - உடம்புக்கு அல்லது முகத்திற்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததாலே, செவி சாய்த்து உண்ணாது மா சிந்தித்தும் - தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் குதிரைகளை நினைத்தும், ஒருகை பள்ளி ஒற்றி - ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்து, ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி - ஒரு கையைத் தலையுடன் கடகம் (கங்கணம்) சேரும்படி வைத்து, நெடிது நினைந்து - நீண்ட நேரம் நினைத்து