முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்
பாடல் வரிகள்:- 063 - 066
.................................திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் . . . .[65]
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, . . . .[63 - 66]
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் . . . .[65]
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, . . . .[63 - 66]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
............................................. திண்ஞா
ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் . . . .[65]
படம்புகு மிலேச்ச ருழைய ராக
ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் . . . .[65]
படம்புகு மிலேச்ச ருழைய ராக
பொருளுரை:
உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்து, இரண்டாக்கிய அறையினுள்ளும் உள் அறையாகிய பள்ளியறையின்கண் சட்டை அணிந்த ஊமை மிலேச்சர் காவலாக அருகில் இருக்க,
குறிப்பு:
மிலேச்சர் (66) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - துருக்கர். இவர் பெலிசித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலூச்சர் என்பதே மிலேச்சர் எனத் திரிந்து வழங்கிற்று என்றும் கூறுப. இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் யவனர் மிலேச்சர்முதலிய பிற நாட்டினரையும் தம் அரண்மனை அகப்பணி செய்தற்கு அமைத்துக் கொண்டிருந்தமை அறிக.
சொற்பொருள்:
திண் ஞாண் - திண்ணிய கயிறு, எழினி - திரைச்சீலை, வாங்கிய - வளைத்து, ஈரறை - இரண்டு அறை, பள்ளியுள் - படுக்கை அறையுள், உடம்பின் உரைக்கும் - கையாலும் முகத்தாலும் உரைக்கும், உரையா நாவின் - பேசாத நாவுடைய, படம் புகு மிலேச்சர் - சட்டை அணிந்த மிலேச்சர், உழையர் ஆக - அருகில் காவலாக இருக்க