முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

பாசறையில் காவலாளர்
பாடல் வரிகள்:- 050 - 054
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ, . . . . [50 - 54]
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் செய்ய
பொருளுரை:
நீண்ட நாக்கினையுடைய ஒளியுடைய மணிகளின் ஓசை குறைந்த நடு இரவில், மலர்களையுடைய ஆடும் அதிரல் கொடிகளும் புதர்களும் நீர்த் துவலையோடு வீசும் காற்றிற்கு அசைந்தாற்போல், தலைப்பாகைக் கட்டிய, உடம்பைப் போர்த்திய, நல்ல ஒழுக்கத்தையுடைய, காவல் பணியைப் புரியும் மிகுந்த வயதானவர் அசைந்தார்.
குறிப்பு:
நிழத்திய (50) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - ‘நுணுகுதல், பேரொலியாகாமல் சிறிது ஒலிக்க என்றவாறு’. தொல்காப்பியம் - ‘ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்’ (தொல் உரி 32). நச்சினார்க்கினியர் உரை - ‘எறிந்து விட்ட’, பாசறையில் படைஞர் இனித் துயில் கொள்க என்பதன் பொருட்டு மணி ஒலிப்பர் என்பது அவர் கருத்து. இலக்கணம்: படாஅர் - இசை நிறை அளபெடை. ஆங்கு - உவம உருபு. அசைவந்த - பெயரெச்சம்.
சொற்பொருள்:
நெடு நா - நீண்ட நாக்கு, ஒண் மணி - ஒளியுடைய மணி, நிழத்திய - குறைந்த, நடுநாள் - நடு இரவு, அதிரல் - புனலி மலர்கள், காட்டு முல்லை, பூத்த ஆடுகொடி - மலர்ந்த ஆடும் கொடி, படாஅர் - புதர், சிதர்வரல் அசை வளி அசைவந்தாங்கு - நீர்த் துவலையால் அசையும் காற்றிற்கு அசைந்தாற்போல், துகில் முடித்து - தலைப்பாகை கட்டி, போர்த்த - துணியால் உடம்பைப் போர்த்திய, தூங்கல் - அசைதல், ஓங்கு நடை - பெரிய ஒழுக்கம், பெருமூதாளர் - மிகவும் வயதானவர், ஏமம் - காவல், சூழ - சூழ