முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு


மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்

பாடல் வரிகள்:- 045 - 049

குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து, . . . .[45]

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, . . . .[45 - 49]

பொருளுரை:

முன் கையில் சிறிய வளையல்களையும், அழகிய சிறிய முதுகில் கூந்தல் அசைந்து கிடப்பதையும் உடைய மகளிர், இரவைப் பகலாக்கும் ஒளியுடைய திண்ணிய கைப்பிடியுடைய வாளினை, கலந்த நிறத்தையுடைய வரிந்து கட்டிய கச்சிலில் அணிந்திருந்தனர். அவர்கள் எண்ணையை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்களாக, பாவை விளக்கின் கையில் உள்ள அகலில் உள்ள நீண்ட திரியைக் கொளுத்தி, அவற்றில் தீ அணையும் பொழுதெல்லாம் மீண்டும் கொளுத்தினர்.

குறிப்பு:

விரவு (47) - நச்சினார்க்கினியர் உரை - விரவின நிறத்தையுடைய. நெடுநல்வாடை 101-102 - யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து. இலக்கணம்: கொளீஇ - சொல்லிசை அளபெடை.

சொற்பொருள்:

குறுந்தொடி - சிறிய வளையல்கள், முன் கை - முன் கை, கூந்தல் - கூந்தல், அம் சிறுபுறத்து - அழகிய சிறிய முதுகில், இரவு பகல் செய்யும் - இரவைப் பகலாகச் செய்யும், திண் பிடி - வலிமையான கைப்பிடி, ஒள்வாள் - ஒளியுடைய வாள், விரவு - கலந்த நிறத்தையுடைய, வரி கச்சின் — வரிந்து கட்டிய கச்சிலில், பூண்ட - அணிந்த, மங்கையர் - மகளிர், நெய் உமிழ் சுரையர் - எண்ணையை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்கள், நெய்யை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்கள், நெடுந்திரி கொளீஇ - நீண்ட திரியைக் கொளுத்தி, கை அமை விளக்கம் - பாவை விளக்கின் கையில் உள்ள அகல், நந்துதொறும் மாட்ட - தீ அணையும் பொழுதெல்லாம் கொளுத்தினர்