முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

பாசறையில் மன்னனுக்குத் தனி இடம்
பாடல் வரிகள்:- 043 - 044
வேறு பல் பெரும்படை நாப்பண், வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு. . . .[43 - 44]
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு. . . .[43 - 44]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
பொருளுரை:
அமைந்த வேறு பல பெரும்படைகளுக்கு நடுவில், வேறு நீண்ட குத்துக் கோல்களை நட்டி பல நிறங்களுடைய திரைச் சீலையால் பகுதிகளாகப் பிரித்தனர்.
குறிப்பு:
கண்டம் (44) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - ஆகுபெயரால், பல நிறத்தால் கூறுபட்ட திரையை உணர்த்திற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை - கண்டத் திரைக்கு ஆகுபெயர், கண்டம் கூறு என்ற பொருளாகலின் பல கூறுப்பட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயராய் ஆயிற்று.
சொற்பொருள்:
வேறு பல் பெரும் படை நாப்பண் - வேறு பல பெரும் படைகளின் நடுவில், வேறு ஓர் - வேறு ஓர், நெடுங்காழ்க் கண்டம் கோலி - நீண்ட குத்துக் கோல்களை நட்டி திரைச் சீலையால் பகுதிகளாகப் பிரித்து, அகம் - உள்ளே, நேர்பு - உடன்பட்டு