முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு


பாசறையில் வீரர்களின் அரண்கள்

பாடல் வரிகள்:- 037 - 042

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப, நற்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் . . . .[40]

பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக, . . . .[37 - 42]

பொருளுரை:

ஆடையைக் காவிக்கல்லில் தோய்த்து உடுத்தும், விரதங்களைச் செய்யும் பார்ப்பான் முக்கோலில் உடையினை தொங்க வைத்ததைப் போல், நல்ல போரில் புறமுதுகு காட்டி ஓடாமைக்கு காரணமான வலிமையான வில்லைக் குத்தி, அவற்றிலே தூணிகளைத் தொங்கவிட்டு, கூடமாகக் தூண்களை நட்டி, கயிற்றை இழுத்துக் கட்டின இடத்தில், பூ வேலைப்பாடு உடைய கை வேல்களை ஊன்றிக் கேடயத்தைப் பிணித்து, இயற்றப்பட்ட வளைந்த வில்லாகிய அரணே காவலாக,

குறிப்பு:

முக்கோல் - வைணவ துறவிகளின் முக்கோல். முக்கோல் பகவர் (திரிதண்டி) - ‘உள்ளம், மெய், நா’ அடக்கியவர்கள். கலித்தொகை 9 - உரை சான்ற முக்கோலும் நெறிப்பட சுவல் அசைஇ, கலித்தொகை 126 - முக்கோல் கொள் அந்தணர். பட்டினப்பாலை 78 - கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 - காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.

சொற்பொருள்:

கல் தோய்த்து - துணியைக் காவிக்கல்லில் தோய்த்து, உடுத்த - உடுத்தும், படிவம் - விரதம், பார்ப்பான் - அந்தணன், முக்கோல் - மூன்று கம்புகள் இணைந்து கட்டப்பட்ட கோல், அசைநிலை கடுப்ப - இட்டு வைத்ததைப் போன்று (கடுப்ப - உவம உருபு), நற்போர் ஓடா - நல்ல போரில் ஓடாத, வல் வில் - வலிமையான வில், தூணி - அம்புக்கூடு, அம்புகளைக் கொள்ளும் பெட்டி, நாற்றி - தொங்கவிட்டு, கூடம் - கூடாரம், குத்தி - நட்டி, கயிறு வாங்கு - கயிற்றை இழுத்துக் கட்டின, இருக்கை - இருப்பிடம், பூந்தலை குந்தம் - தலையில் பூத்தொழில் அமைந்த கை வேல், குத்தி - நட்டி, கிடுகு நிரைத்து - கேடயங்களை வரிசையாக வைத்து, வாங்கு வில் - வளைந்த வில், அரணம் அரணமாக - அரணே தங்களுக்குக் காவலாக அமைந்த