முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
பாடல் வரிகள்:- 029 - 036
கவலை முற்றம் காவல் நின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா இளைஞர் கவளம் கைப்பக், . . . .[29 - 36]
கவலை முற்றங் காவ னின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா யிளைஞர் கவளங் கைப்பக்
பொருளுரை:
தழையால் வேயப்பட்ட கூரையுடைய ஒழுங்கான தெருவில், நாற்சந்தியின் முற்றத்தில், காவலாக, மதம் பாய்கின்ற கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை ஒன்று நின்றது. உயர்ந்து வளர்ந்த கரும்பும், அதிமதுரமும், மற்றும் வயலில் விளைந்த நெற்கதிரும் நெருக்கமாகச் சேர்த்து கட்டப்பட்ட இவற்றை உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவி, தன் தும்பிக்கையைத் தந்தங்களின் மீது வைத்தது. பிளவுபட்ட கூர்மையான கருவியைத் தன் கையில் கொண்ட வட மொழியை கற்காத இளைஞன் யானையிடம் வடமொழிச் சொற்கள் சிலவற்றைக் கூறி உணவுக் கவளங்களைக் கையில் கொடுத்தான்.
குறிப்பு:
கவலை (31) - நச்சினார்க்கினியர் உரை - நாற்சந்தி. வயல் விளை (33) - பொ. வே. சோமசுந்தரனார் - வயல் விளை கதிர் என மாறுக, நச்சினார்க்கினியர் - வயலிலே விளைந்த நெற்கதிர், வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் (35-36) - வடமொழியை அடியிலே கல்லாத இளைஞர் யானைப் பேச்சான வடமொழிகளைக் கற்று பலகாற் சொல்லி. மலைபடுகடாம் - 326-327 - உரவுச் சினம் தணித்து பெரு வெளிற் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர். இலக்கணம்: கவுள - குறிப்புப் பெயரெச்சம். யாத்த - பலவின்பாற்பெயர், கொண்டென - செய்தன என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தேம்படு - தேம் தேன் என்றதன் திரிபு.
சொற்பொருள்:
உவலை - சருகு, இலை, கூரை - கூரை, ஒழுகிய தெருவில் - ஒழுங்கான தெருவில், கவலை - பல தெருக்கள் கூடுமிடம், நாற்சந்தி, முற்றம் காவல் நின்ற - முற்றத்தில் காவல் நின்ற, தேம்படு கவுள - மதநீர் ஒழுகும் கன்னத்துடன், சிறு கண் யானை - சிறிய கண்ணையுடைய யானை, ஓங்கு நிலை கரும்பொடு - உயர்ந்து வளர்ந்த கரும்புடன், கதிர் - நெற்கதிர், மிடைந்து யாத்த - நெருக்கமாகக் கட்டியவற்றை, வயல் விளை - வயலில் விளைந்த, இன்குளகு - இனிய அதிமதுரம், உண்ணாது - உண்ணாமல், நுதல் துடைத்து - நெற்றியைத் துடைத்து, அயில் நுனை - கூர்மையான நுனி, மருப்பின் - தந்தத்தில், தம் கையிடைக் கொண்டென - தன்னுடைய தும்பிக்கையை இடையில் வைத்தது, கவை முள் - பிளவுபட்ட கூர்மையான, கருவியின் - கருவியின், வடமொழி - வடமொழி, பயிற்றி - கூறி, கல்லா இளைஞர் - வடமொழியில் கல்வியில்லாத இளைஞர், கவளம் கைப்ப - கவளங்களைக் கையில் கொடுக்க