சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

மறவர் போற்றல்
பாடல் வரிகள்:- 210 - 212
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், . . . .[210]
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த . . . .[210 - 212]
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த . . . .[210 - 212]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு . . . .[210]
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
பொருளுரை:
தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள் செய்தலும், கொடிய சினம் இன்மையும், மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலும், தோற்ற படையைப் பொறுத்தலும், அவனுடைய வாள் வலிமையால் மேலாகிய மறவர் புகழ,
சொற்பொருள்:
அஞ்சினர்க்கு அளித்தல் - தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள்தல், வெஞ்சினம் இன்மையும் - கொடிய சினம் இன்மையும், ஆண் அணி புகுதல் - மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலும், அழி படை தாங்கலும் - தோற்ற படையைப் பொறுத்தலும், வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த - வாள் வலிமையால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,