பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


வளம் பெருக்கிய வளவன்

பாடல் வரிகள்:- 283 - 292

காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக் . . . .[285]

கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில் தொறும் புதை நிறீஇப்
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது, . . . .[290]

திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப . . . .[283-292]

பொருளுரை:

காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளங்களைத் தோண்டி, வளமையைப் பெருக்கி, பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, அரண்களின் ஏவல் அறைதோறும் அம்புக் கூட்டை நிறுவி, “போர் செய்வேன் நான்” என்று சூள் உரைத்து, “விட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறமுதுகு இடாது இருந்தான் கரிகாலன். வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது மதில் மின்னலைப் போன்று ஒளி வீச,

சொற்பொருள்:

காடு கொன்று நாடாக்கி - காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளம் தொட்டு - குளங்களைத் தோண்டி, வளம் பெருக்கி - வளமையைப் பெருக்கி, பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி - பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, கோயிலொடு குடிநிறீஇ - அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, வாயிலொடு புழையமைத்து - அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, ஞாயில் தொறும் - அரண்களின் ஏவல் அறைதோறும், புதை நிறீஇ - அம்புக் கூட்டை நிறுவி, பொருவேம் என பெயர் கொடுத்து - போர் செய்வேன் என்று சூள் உரைத்து, ஒருவேம் என - விட்டு அகலமாட்டேன் என்று கூறி, புறக்கொடாது - புறமுதுகு இடாது, திரு நிலைஇய - வீரத் திருமகள் நிலைத்த, செல்வம் நிலைத்த, பெரு மன் எயில் மின் ஒளி எறிப்ப - பெரிய நிலையான மதில் மின்னலைப் போன்று ஒளி வீச

குறிப்பு:

பெயர் கொடுத்து (289) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வஞ்சினத்தால் தனக்கு ஒரு பெயர் பெறுதலின் வஞ்சினத்தைப் பெயர் என்றார்.