பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

திருமாவளவனின் வெற்றிச் சிறப்பு
பாடல் வரிகள்:- 274 - 282
தொல் அருவாளர் தொழில் கேட்ப, . . . .[275]
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல் கெடச் சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்
மாத்தானை மற மொய்ம்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப் . . . .[280]
புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோவேள் மருங்கு சாயக் . . . .[274-282]
தொல்லருவாளர் தொழில்கேட்ப . . . .[275]
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
மாத்தானை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் . . . .[280]
புன்பொதுவர் வழிபொன்ற
விருங்கோவேண் மருங்குசாயக்
பொருளுரை:
ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்கவும், தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து பணிந்து அறிவுரைக் கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறையவும், ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்றவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெடவும்,
சொற்பொருள்:
பல் ஒளியர் பணிபு ஒடுங்க - ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்க, தொல் அருவாளர் தொழில் கேட்ப - தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து அறிவுரைக் கேட்க, வடவர் வாட - வடக்கில் உள்ள அரசர்கள் வாட , குடவர் கூம்ப - குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறைய, சீறி மன்னர் மன் எயில் கதுவும் - ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்றவும், தென்னவன் திறல் கெட - பாண்டிய மன்னனின் வலிமை கெட, மதன் உடை நோன் தாள் - செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, மாத் தானை - பெரிய தானை, மற - மறம், மொய்ம்பின் - வலிமையுடன், செங்கண்ணால் செயிர்த்து நோக்கி - சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புன் பொதுவர் வழி பொன்ற - புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெட, இருங்கோவேள் மருங்கு சாய - இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெட,