பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

செழு நகரின் சீர் குலைந்த தன்மை
பாடல் வரிகள்:- 261 - 269
விருந்து உண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்த்
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇக் . . . .[265]
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங்கூட்டு உள் அகத்து இருந்து,
வளைவாய்க் கூகை, நன்பகல் குழறவும்,
அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய . . . .[261-269]
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் . . . .[265]
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
பொருளுரை:
வளைந்த தூண்களையுடைய மாடங்களில் விருந்தினர் சென்று நெருங்கி இருந்து விருந்து உண்டு இடைவெளி இல்லாத பெரிய சோற்றைச் சமைக்கும் அடுக்களையையும் ஒளியுடைய சுவரையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணையின் மேல் இருந்து பச்சைக் கிளிகள் பேசும் பால் நிறைந்த வளமான ஊர், தோல் செருப்பைக் காலில் அணிந்த, துடி முழங்க திரண்டு வந்த வளைந்த வில்லையுடைய எயினர்கள் கொள்ளை கொண்டு உண்டதால், உணவு இல்லாத நெற்கூடுகளின் உள்ளே இருந்து வளைந்த வாயையுடைய கூகைகள் நன்பகலில் குழறவும், இவ்வாறு அரிய காவலையுடைய ஊர்களின் அழகு அழிய,
சொற்பொருள்:
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை - வளைந்த தூண்களையுடைய மாடங்களில், உருண்டை தூண்களையுடைய மாடங்களில், துவன்று விருந்துண்டு - நெருங்கி விருந்து உண்டு, ஆனாப் பெருஞ்சோற்று - இடைவெளி இல்லாத பெரிய சோற்றை, அட்டில் - அடுக்களை, ஒண் சுவர் நல் இல் - ஒளியுடைய சுவரையுடைய நல்ல இல்லங்களில், உயர் திணை இருந்து - உயர்ந்த திண்ணையின் மேல் இருந்து, பைங்கிளி மிழற்றும் - பச்சைக் கிளிகள் பேசும், பால் ஆர் செழு நகர் - பால் நிறைந்த வளமான ஊர், தொடுதோல் அடியர் - செருப்பைக் காலில் அணிந்தவர்கள், துடி பட முழங்க - துடி முழங்க, குழீஇ - திரண்டு, கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயினர்கள், கொடிய வில்லையுடைய எயினர்கள், கொள்ளை உண்ட - கொள்ளை கொண்டு உண்ட, உணவு இல் வறுங்கூட்டு - உணவு இல்லாத நெற்கூடுகள், உள்ளகத்து இருந்து - உள்ளே இருந்து, வளைவாய்க் கூகை - வளைந்த வாயையுடைய கூகைகள், நன்பகல் குழறவும் - பகலில் குழறவும், அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய - அரிய காவலையுடைய ஊர்களின் அழகு அழிய
குறிப்பு:
கொடுங்கால் (261) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உருண்ட தூண்கள், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வளைந்த தூண்கள்.