பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

கந்துடைப் பொதியிலின் நிலை
பாடல் வரிகள்:- 246 - 251
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப் . . . .[250]
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் . . . .[246-251]
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் . . . .[250]
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
பொருளுரை:
பகைவர் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்கள் நீர் உண்ணும் துறையில் மூழ்கி அந்தி நேரத்தில் கொளுத்திய அணையாத விளக்கையுடைய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெழுகின இடத்தில் ஏறி பலர் தொழ, புதியவர்கள் வந்து தங்கும், கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய மன்றங்களில், பருத்த நிலையையுடைய உயரமான தூண்கள் சாயும்படி உரசி, பெரிய நல்ல களிற்று யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கவும்,
சொற்பொருள்:
கொண்டி மகளிர் - பகைவர் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்கள், உண் துறை மூழ்கி - நீர் உண்ணும் துறையில் மூழ்கி, அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - அந்தி நேரத்தில் கொளுத்திய அணையாத விளக்கையுடைய, மலர் அணி மெழுக்கம் ஏறி - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெழுகின இடத்தில ஏறி, பலர் தொழ - பலர் தொழ, வம்பலர் சேக்கும் - புதியவர்கள் வந்து தங்கும், கந்துடைப் பொதியில் - கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய மன்றங்களில், பரு நிலை நெடுந்தூண் - பருத்த நிலையையுடைய உயரமான தூண், ஒல்க - சாய, தீண்டி - உரசி, பெரு நல் யானையொடு - பெரிய நல்ல களிற்று யானைகளுடன், பிடி புணர்ந்து உறையவும் - பெண் யானைகள் கூடித் தங்கவும்
குறிப்பு:
கொண்டி மகளிர் (246) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்.