பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

திருமாவளவன் உடற்றிய போரினால் மருத நில வளம் அழிதல்
பாடல் வரிகள்:- 240 - 245
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியும் மயங்கி, நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் . . . .[240-245]
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியு மயங்கி நீரற்
றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் . . . .[245]
பொருளுரை:
முன்பு வெள்ளை மலர்களையுடைய கரும்புடன் சிவப்பு நெல் வளர்ந்து, பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து, முதலைகள் நிறைந்த பெரிய பொய்கைகளில், இப்பொழுது பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன் கோரையும் அடர்ந்து, வயலும் குளமும் கலங்கி நீர் இல்லாதுப் போய் விட்டது. அங்கு வரியுடைய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்களுடன் பெண் மான்கள் துள்ளி விளையாடுகின்றன.
சொற்பொருள்:
வெண்பூக் கரும்பொடு - வெள்ளை மலர்களையுடைய கரும்புடன், செந்நெல் - சிவப்பு நெல், நீடி - உயர்ந்து வளர்ந்து, மா இதழ்க் குவளையொடு - பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன், நெய்தலும் மயங்கி - நெய்தல் மலர்களும் கலந்து, கராஅம் - முதலை, கலித்த - நிறைந்த, கண் அகன் பொய்கை - பெரிய குளம், கொழுங் கால் புதவமொடு - பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன், செருந்தி நீடி - கோரையும் அடர்ந்து, செறுவும் வாவியும் - வயலும் குளமும், மயங்கி - கலங்கி, நீர் அற்று - நீர் இன்றி, அறு கோட்டு இரலை - வரிகளையுடைய கொம்புகளையுடைய ஆண் மான்கள், அறுபட்ட கொம்புகளையுடைய ஆண் மான்கள், மான் பிணை உகளவும் - பெண் மான்கள் துள்ளி விளையாடும்
குறிப்பு:
அறு கோட்டு (245) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறுப்புடைய (வரியுடைய) கொம்பு, நற்றிணை 265 - H.வேங்கடராமன் உரை - உதிர்ந்த கொம்பினையுடைய, அகநானூறு 147, வேங்கடசாமி நாட்டார் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறல்பட்ட கொம்பினையுடைய, அகநானூறு 353 - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறுத்தாற்போன்ற கொம்பினையுடைய, வேங்கடசாமி நாட்டார் உரை - அறல்பட்ட கொம்பினையுடைய.