பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

திருமாவளவனது போர்த்திறன்
பாடல் வரிகள்:- 228 - 239
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடைக் கருந்தலை புரட்டும் முன் தாள் . . . .[230]
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை,
வடி மணிப் புரவியொடு, வயவர் வீழப்
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போலப் போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப் . . . .[235]
பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று முன் சமம் முருக்கித்
தலை தவச் சென்று தண் பணை எடுப்பி . . . .[228-239]
கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா . . . .[230]
ளுகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் . . . .[235]
பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச
மாக்க ணகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
பொருளுரை:
தன்னுடைய அரசுரிமையைப் பெற்றதற்காக அவன் மகிழ்ச்சி அடையவில்லை. பகைவரின் காவலுடைய கோட்டைகளை அழித்த, கதவுகளை உடைக்கும் தந்தங்களையுடைய, பகை மன்னர்களின் முடியையுடைய கரிய தலைகளை உருட்டும் முன் கால் நகங்களைக் கொண்ட அடிகளையுடைய உயரமான அழகிய யானைகளுடனும், அழகிய மணிகளையுடைய குதிரைகளுடனும், பகை மறவர்கள் விழ, பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் பறக்க, சிறிய செடிகள் படர்ந்த பெரிய பாறைகளைப் போலத் தோன்றியப் போரை விரும்பிய மறவர்களுடன், பூளையொடு, உழிஞை மலரையும் சூடி, பேயின் கண்களைப் போல் உள்ள பெரிய கண்ணையுடைய முழங்கும் காவலுடைய முரசு பெரிய பாசறை அதிரும்படி முழங்க, போர் முனைக் கெடச் சென்று, பகைவரை அழித்து அப்பகைவரின் அரணிற்கு மேலும் சென்று, பகைவரின் குளிர்ச்சியுடைய மருத நிலத்தின் குடிகளை விரட்டி விட்டான்.
சொற்பொருள்:
பெற்றவை மகிழ்தல் செய்யான் - தன்னுடைய அரசுரிமையைப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடையவில்லை, செற்றோர் கடி அரண் தொலைத்த - பகைவரின் காவலுடைய கோட்டைகளை அழித்த, கதவு கொல் மருப்பின் - கதவுகளை உடைக்கும் தந்தங்களையுடைய, முடி உடைக் கருந்தலை - முடியையுடைய கரிய தலைகள், புரட்டும் - உருட்டும், முன் தாள் - முன் கால், உகிர் உடை அடிய - நகங்களையுடைய காலடிகள், ஓங்கு எழில் யானை - உயரமான அழகிய யானைகள், வடி மணிப் புரவியொடு - அழகிய/வடிக்கப்பட்ட மணிகளையுடைய குதிரைகளுடன், வயவர் வீழ - பகை மறவர்கள் விழ, பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப - பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் பறக்க, தூறு இவர் துறுகல் போல - சிறிய செடிகள் படர்ந்த பெரிய பாறைகளைப் போல, போர் வேட்டு - போரை விரும்பி, வேறு பல பூளையொடு - வேறு பல பூளையொடு, உழிஞை சூடி - உழிஞை மலர்களையும் சூடி, பேய்க் கண் அன்ன - பேயின் கண்களைப் போல, பிளிறு கடி முரசம் - பெரிய கண்ணையுடைய முழங்கும் காவலுடைய முரசு, மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க - பெரிய பாசறை அதிரும்படி முழங்கி, முனை கெட - போர் முனை கெட, சென்று - சென்று, முன் சமம் முருக்கி - பகைவரை அழித்து, தலை தவச் சென்று - அப்பகைவரின் அரணிற்கு மேலும் சென்று, தண் பணை எடுப்பி - குளிர்ச்சியுடைய மருத நிலத்தின் குடிகளை விரட்டி விட்டு,
குறிப்பு:
புரட்டும் (230) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உதைத்து உருட்டும்.