நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

கொற்றவையை வேண்டல்
பாடல் வரிகள்:- 166 - 168
..................... நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம............... . . . .[166 - 168]
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம............... . . . .[166 - 168]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
................. நலங்கிள ரரிவைக்
கின்னா வரும்படர் தீர விறறந்
தின்னே முடிகதில் லம்ம ..............
கின்னா வரும்படர் தீர விறறந்
தின்னே முடிகதில் லம்ம ..............
பொருளுரை:
அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, தீமையாக இருக்கின்ற பெரும் வேதனை தீர, மன்னன் வெற்றி அடைந்து உடனே வர வேண்டும். இது எங்கள் விருப்பம். எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருளுவாயாக கொற்றவையே!
குறிப்பு:
பொ. வே. சோமசுந்தரனார் உரை - இது வெற்றிப் பொருட்டுக் கொற்றவையைப் பரவுவாள் (பாராட்டுவாள்) ஒருத்தியின் கூற்றாகக் கூறப்பட்டது.
சொற்பொருள்:
நலங்கிளர் அரிவைக்கு - அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, இன்னா - தீமை, அரும் படர் தீர - பெரும் வேதனைத் தீர, விறல் தந்து - வெற்றி அடைந்து, இன்னே முடிக - உடனே முடித்து வருக, தில் - ஓர் அசைச்சொல், அம்ம - கேட்பாயாக கொற்றவையே