நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

தேற்றும் செவிலியர்
பாடல் வரிகள்:- 152 - 156
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என . . . .[155]
உகத்தவை மொழியவும்.............. . . . .[152 - 156]
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என . . . .[155]
உகத்தவை மொழியவும்.............. . . . .[152 - 156]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுணை யோரென . . . .[155]
வுகத்தவை மொழியவு...............
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுணை யோரென . . . .[155]
வுகத்தவை மொழியவு...............
பொருளுரை:
நரை மயிர் கலந்த நறுமணமுடைய மென்மையான கூந்தலை உடைய சிவந்த முகத்தையுடைய செவிலிகள், மிகுதியாகத் திரண்டு, குறைவாகவும் மிகுதியாகவும் சொற்களைப் பல முறை கூறி, “விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர்” என மனதுக்கு இனியவற்றை கூறவும்,
சொற்பொருள்:
நரை விராவுற்ற - நரை மயிர் கலந்த, நறு மென் கூந்தல் - நறுமணமுடைய மென்மையான கூந்தல், செம்முகச் செவிலியர் - சிவந்த முகத்தையுடைய செவிலிகள், கைம்மிகக் குழீஇ - மிகுதியாகத் திரண்டு (குழீஇ - சொல்லிசை அளபெடை), குறியவும் நெடியவும் - குறைவாகவும் மிகுதியாகவும், உரை பயிற்றி - சொற்களைப் பல முறை கூறி, இன்னே வருகுவர் - இன் துணையோர் - விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர், என- என்று, உகத்தவை - மனதுக்கு இனியவற்றை, மகிழ்ச்சி தருவனவற்றை, மொழியவும் - கூறவும்