நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

தலைவியின் அடியை வருடும் செவிலியர்
பாடல் வரிகள்:- 147 - 151
......................... புனைவு இல்
தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின், . . . .[150]
மெல் இயல் மகளிர் நல்அடி வருட . . . .[147 - 151]
தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின், . . . .[150]
மெல் இயல் மகளிர் நல்அடி வருட . . . .[147 - 151]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
......................... புனைவி
றளிரேர் மேனித் தாய சுணங்கி
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் . . . .[150]
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
றளிரேர் மேனித் தாய சுணங்கி
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் . . . .[150]
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
பொருளுரை:
ஒப்பனை இல்லாத தளிர் போன்ற மேனியையும், பரந்த தேமலையும், அழகிய மூங்கிலைப் போன்ற திரண்ட மென்மையான தோளினையும், கச்சையினால் இறுக்கமாகக் கட்டிய தாமரை மொட்டினைப் போன்ற முலைகளையும், வளைந்த அசையும் இடையையுமுடைய மென்மையான பெண்கள், அரசியின் நல்ல அடியைத் தடவ,
சொற்பொருள்:
புனைவு இல் - ஒப்பனை இல்லாத, தளிர் ஏர் மேனி - தளிர் போன்ற உடல், தாய சுணங்கின் - பரந்த தேமலையும், அம் பணை - அழகிய மூங்கில், தடைஇய - திரண்ட, வளைந்த, மென் தோள் - மென்மையான தோள், முகிழ் முலை - தாமரை மொட்டினைப் போன்ற முலைகள், வம்பு விசித்து யாத்த - கச்சை இறுக்கமாகக் கட்டிய, வாங்கு சாய் நுசுப்பின் - வளைந்த அசையும் இடையையுடைய, மெல் இயல் மகளிர் - மென்மையான பெண்கள், நல் அடி வருட - நல்ல அடியைத் தடவ