நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


தலைவியின் கட்டில்

பாடல் வரிகள்:- 115 - 123

தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், . . . .[115]

இகல்மீக் கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளிக் குயின்ற ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் . . . .[120]

புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருந்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் . . . .[115 - 123]

பொருளுரை:

நாற்பது வயதை அடைந்த, பணை முரசைப்போன்று வலிமையான கால்களையும், போரில் புகழடைந்த, உயர்ந்த அழகுடைய, நெற்றியில் வரிகளையுடைய, போரில் வீழ்ந்த யானையின் தானாக விழுந்த தந்தங்களின் பக்கங்களைச் செதுக்கி, சீருடனும் செம்மையாகவும் வல்லவனான தச்சன் கூர்மையான உளியால் செதுக்கிய இரண்டு இலைகளை இடையில் இட்டு, கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்களின் வீங்கிய முலைகளைப் போல் பக்கங்கள் திரண்டு இருந்த குடத்தை உடையவாய்க் கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடத்தில் பொருத்தி, திரண்டு, பூண்டைப் போன்ற உறுப்புகளைப் பொருத்தி, கால்களை அமைத்து, பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்.

சொற்பொருள்:

தச நான்கு - நாற்பது, எய்திய - அடைந்த, பணை மருள் - பணை முரசைப்போன்று (மருள் ஓர் உவமவுருபு - தொல். பொ. 286) அல்லது பணை முரசென்று மருளும், நோன் தாள் - வலிமையான கால்கள், இகல்மீக் கூறும் - போரில் மேலே சென்ற, ஏந்து எழில் - உயர்ந்த அழகு, வரி நுதல் - நெற்றியில் வரி, பொருது ஒழி நாகம் - போரில் அழிந்த யானை, ஒழி எயிறு - விழுந்த தந்தங்கள், அருகு எறிந்து - பக்கங்களில் செதுக்கி, சீரும் செம்மையும் ஒப்ப - சீருடனும் செம்மையாகவும், வல்லோன் - வல்லவன், தச்சன் - தச்சன், கூர உளிக் குயின்ற - கூர்மையான உளியால் செதுக்கிய, ஈரிலை - இரண்டு இலைகள், இடை இடுபு - இடையில் இட்டு, தூங்கு இயல் மகளிர் - கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்கள், வீங்கு முலை கடுப்ப - வீங்கிய முலைகளைப் போல், புடை திரண்டு இருந்த - பக்கங்கள் திரண்டு இருந்த, குடத்த - குடத்தை உடையவாய், இடை திரண்டு - கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடம் திரண்டு, உள்ளி நோன் முதல் - பூண்டைப் போன்று, வெங்காயத்தைப் போன்று, பொருத்தி - பொருத்தி, அடி அமைத்து - கால்களை அமைத்து, பேரளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் - பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்