குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!
பாடல் வரிகள்:- 251 - 261
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், . . . .[255]
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர் . . . .[260]
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே. . . .[251 - 261]
லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும்
புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும்
வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத்
துருமுஞ் சூரு மிரைதே ரரவமு . . . .[255]
மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங்
கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும்
பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமமவர் . . . .[260]
குழுமலை விடரக முடையவா லெனவே.
பொருளுரை:
இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், உட்துளை உடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும், வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடியும், வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், ஒடுக்கமான கருமையான குளங்களில், கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கரும் கராமும், ஆறலைக் கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பேய்களும், மலைப் பாம்புகளும், உட்பட பிறவும், தப்ப முடியாத தொல்லையைத் தருவன ஆகியவை அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருப்பதால்.
குறிப்பு:
இடங்கர் கராம் ஆகிய இரண்டும் முதலை வகையைச் சார்ந்தவை. நற்றிணை 205 - ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும். ஊழ் அடி முட்டமும் (258) - நச்சினார்க்கினியர் உரை - முறைப்படியாயப் பின்பு வழி முட்டாயிருக்கும் இடங்களும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - நடை பாதைபோல் தோன்றிச் செல்லத் தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது மாறிவிடும் நெறி.
சொற்பொருள்:
கங்குல் அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும் - இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், புழல் கோட்டு ஆமான் புகல்வியும் - உட்துளை உடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளையும், களிறும் - ஆண் யானைகளும், வலியின் தப்பும் - வலிமையால் கெடுக்கும், வன்கண் வெஞ்சினத்து - கொடூரமான சினத்துடன், உருமும் - இடியும், சூரும்- வருத்தும் கடவுள்களும், இரை தேர் அரவமும் - இரை தேடும் பாம்புகளும், ஒடுங்கு இருங் குட்டத்து - ஒடுக்கமான கருமையான குளங்களில், அருஞ்சுழி வழங்கும் கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும் - கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும், இடங்கரும், கராமும், நூழிலும் - ஆறலைக் கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், இழுக்கும் - வழுக்கும் இடங்களும், ஊழ் அடி முட்டமும் - முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பழுவும் - பேய்களும், பாந்தளும் - மலைப் பாம்புகளும், உளப்படப் பிறவும் - உட்பட பிறவும், வழுவின் வழாஅ விழுமம் - தப்ப முடியாத தொல்லையைத் தருவன, அவர் குழு மலை விடர் அகம் உடையவால் எனவே - அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருப்பதால்